Don't Miss!
- News கடையில் கைவரிசை! ரூ.13,000க்காக இந்தியாவின் மானத்தை வாங்கிய மாணவிகள்.. அமெரிக்க போலீஸ் கொடுத்த ஷாக்
- Automobiles தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Finance தங்கம் விலை ஏவுகணை போல் உயர்வு.. இன்று சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..?!
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எல்லோரும் பார்த்து ரசித்த பாகுபலி... 2015ல் இந்தியாவின் சிறந்த படம்.. தேசிய விருதுகள்
டெல்லி: 63 வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் பாகுபலி சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
2015 ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் பெறுவோர் குறித்த அறிவிப்புகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் நடிகர் அமிதாப்பச்சன், நடிகை கங்கனா ரனாவத் ஆகியோர் சிறந்த நடிகர், நடிகைக்கான விருதுகளை வென்றுள்ளனர்.
பாகுபலி
63 வது தேசிய விருதுகள் விழாவில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ராஜமௌலியின் பாகுபலி, சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யபட்டுள்ளது.
அமிதாப்பச்சன்
சிறந்த நடிகராக அமிதாப்பச்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமிதாப் பச்சன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பிக்கு(இந்தி) திரைப்படத்திற்காக இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் 4 வது முறையாக தேசிய விருதை அமிதாப்பச்சன் வென்றுள்ளார்.
கங்கனா ரனாவத்
தனு வெட்ஸ் மனு படத்தில் நடித்த கங்கனா ரனாவத் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் 3 வது முறையாக தேசிய விருதினை கங்கனா கைப்பற்றியிருக்கிறார்.
சஞ்சய் லீலா பன்சாலி
பாஜிராவ் மஸ்தானி படத்தை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி சிறந்த இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான இப்படம் வசூல் மற்றும் வரவேற்பு என இரண்டிலுமே குறை வைக்கவில்லை.