Don't Miss!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Finance மாதம் ரூ. 8,150 முதலீட்டில் .. ரூ. 1,00,000 பென்ஷன் பெற முடியும்.. எப்படின்னு பாருங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Automobiles காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஏ.ஆர்.ரஹ்மானின் நெஞ்சுக்குள்ளே…. எம் டிவி விருது கிடைக்குமா?
மும்பை: எம்.டிவி ஐரோப்பிய இசை விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் நெஞ்சுக்குள்ளே பாடல் நாமினேட் ஆகியுள்ளது.
எம்டிவி நிறுவனம் உலகளாவிய சிறந்த இசைக்கலைஞர்களை தேர்வு செய்து 'எம்டிவி ஐரோப்பிய இசை விருதுகள்' என்ற விருதை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு இந்த விருதுகளுக்கான இசைக்கலைஞர்களை தேர்வு செய்யும் முயற்சியில் தற்போது இந்த டிவி நிறுவனம் மும்முரமாக களமிறங்கியுள்ளது.
10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்தத் தேர்வு நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஐந்து இசைக் கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்தந்த பிரிவுகளில் நடைபெறும் தேர்வில் முதலிடம் பெறுபவர் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்.
இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தியா, ஆப்பிரிக்கா, மத்தியக் கிழக்கு நாடுகள் போன்றவை ஒரே பிரிவாக இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் ஐந்து இசைக்கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ரஹ்மான்- ஹனிசிங்
இதில், இந்தியாவின் சார்பில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பஞ்சாபின் ராப் இசைக் கலைஞரான யோ யோ ஹனிசிங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நெஞ்சுக்குள்ளே....
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 'கடல்' படத்தில் வரும் 'நெஞ்சுக்குள்ளே' பாடலுக்காகவும், ஹனிசிங் தன்னுடைய 'பிரிங் மீ பேக்' என்ற பாடலுக்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நெதர்லாந்தில்....
இவர்களுடன் பட்டமீஸ் டில், தும் ஹி ஹோ மற்றும் மன்ஜ்ஹா ஆகிய மூன்று பாடல் குழுவினரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த இசைக் கலைஞர்கள் தேர்வின் இறுதி நிகழ்ச்சி நெதர்லாந்து நாட்டில் உள்ள ஆம்ஸ்டர்டாம் நகரில் நவம்பர் மாதம் 10-ந் தேதி நடைபெற இருக்கிறது.
திறமைக்கு பரிசு
உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இத்தகை இசை விருதுகளுக்கான பரிசீலனையில் இருப்பது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் திறமை இருப்பவர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!