Don't Miss!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Finance மாதம் ரூ. 8,150 முதலீட்டில் .. ரூ. 1,00,000 பென்ஷன் பெற முடியும்.. எப்படின்னு பாருங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Automobiles காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சசிகபூருக்கு தாதாசாஹேப் விருது.... அருண் ஜேட்லி மும்பை சென்று வழங்கினார்!
மும்பை: மும்பையில் நடைபெற்ற விழாவில் பழம்பெரும் இந்தி நடிகர் சசிகபூருக்கு தாதாசாஹேப் பால்கே விருதை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று வழங்கினார்.
நடிகரும், தயாரிப்பாளருமான சசி கபூருக்கு இன்று தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. மே 3ம் தேதி இதுதொடர்பான விழா டெல்லியில் நடந்தது. அப்போது பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. ஆனால் சசி கபூருக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் அவரால் வர முடியவில்லை. இதனால் அவருக்கு பால்கே விருதை தர முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து மும்பைக்கு சென்று இவ்விருதை வழங்க மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி இன்று மும்பையில் உள்ள பிரித்வி திரையரங்கில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. சசி கபூரின் குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் உள்பட பலர் கலந்து கொண்ட இவ்விழாவில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சசி கபூரிடம் தாதா சாகேப் பால்கே விருதை வழங்கி கவுரவித்தார்.