Don't Miss!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Finance மாதம் ரூ. 8,150 முதலீட்டில் .. ரூ. 1,00,000 பென்ஷன் பெற முடியும்.. எப்படின்னு பாருங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Automobiles காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
5 வது முறை தேசிய விருது வென்றார் இளையராஜா... தாரை தப்பட்டைக்காக விருது!
இசைஞானி இளையராஜா 5வது முறையாக தேசிய விருதினைப் பெருகிறார்.
தாரை தப்பட்டை படத்தின் சிறந்த பின்னணி இசைக்காக அவருக்கு இந்த முறை தேசியவிருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தாரை தப்பட்டை படம் இளையராஜாவின் ஆயிரமாவது படமாகும். திரையுலக வரலாற்றில் ஒரு தனி மனிதன் இத்தனைப் படங்களுக்கு இதுவரை இசையமைத்ததில்லை. அந்த சாதனையை இளையராஜா நிகழ்த்தியிருக்கிறார்.
தாரை தப்பட்டை படம் வணிக ரீதியில் எப்படி ஓடியிருந்தாலும் அந்தப் படத்தின் சிறப்பு அம்சமாக இருந்தது இளையராஜாவின் இசைதான்.
பின்னணி இசையும் பாடல்களும் மெய்சிலிர்க்க வைத்தன. அதிலும் அந்த க்ளைமாக்ஸ் இசையில் ருத்ர தாண்டவத்தை கண்முன் காட்டும் ராஜாவின் இசை.
இந்த இசைக்குத்தான் இந்த முறை சிறந்த பின்னணி இசைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நான்கு முறை தேசிய விருதுகளை வென்றவர் இளையராஜா.
சலங்கை ஒலி, சிந்து பைரவி, ருத்ர வீணை படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதினை அவர் பெற்றார். பழஸிராஜா படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதினைப் பெற்றார்.
இப்போது 5வது முறையாக தாரை தப்பட்டை படத்துக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருதினைப் பெற்றுள்ளார்.