Don't Miss!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Finance மாதம் ரூ. 8,150 முதலீட்டில் .. ரூ. 1,00,000 பென்ஷன் பெற முடியும்.. எப்படின்னு பாருங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Automobiles காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இளையராஜாவுக்கு ஸ்ரீசந்திரசேகரேந்திர சுவாமிகள் தேசிய விருது!
மும்பை: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஸ்ரீசந்திரசேகரேந்திர சுவாமிகள் விருது வழங்கப்பட்டது.
நேற்று (13.12.2014)மாலை மும்பையில் காஞ்சி காமகோடி மஹாபெரியவர் ஜகத்குரு ஶ்ரீ சந்திரசேகரேந்திர ஸ்வாமிகள் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
ஜெயேந்திரர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் இசைஞானி இளையராஜா அவர்களின் இசை அர்ப்பணிப்பினைப் பாராட்டி அவருக்கு விருது வழங்கப்பட்டது.
விருதினையும், பாராட்டுப் பத்திரம் மற்றும் நினைவுப் பரிசினையும் பெற்றுக்கொண்டு இசைஞானி ஆற்றிய உரை:
இவ்வரிய வாய்ப்பினை வழங்கிய இறைவனுக்கு நன்றி. குருவருள் இல்லாது இறையருள் கிடைக்காது. இறையருள் இல்லாது குருவருள் கிடையாது. அருள்வழங்குவது இறைவனின் வேலை கிடையாது. எந்த வேலையும் இல்லாதவன் இறைவன். ஏனென்றால் அருளே இறைவன்தான். எப்படி சூரியன் ஒளி வீசுகிறதோ அனல் வழங்குகிறதோ அதுபோன்று.
பொதுவாக விருதுகளைப் பொருட்படுத்துவதில்லை. ஒருமுறை வெளிநாட்டில் உள்ள முக்கியமான அமைப்பு ஒன்று எனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை பெற அழைத்தார்கள். பல தரப்பிலிருந்தும் வற்புறுத்தினார்கள். நான் மறுத்துவிட்டேன் ஏனென்றால் எனது வேலை இன்னும் முடிவுபெறவில்லை. இன்றும் காலை ஏழு மணிக்கெல்லாம் இசைப்பணியினை தொடங்கிவிடுகிறேன்.
எனக்கு இசை வழிகாட்டி யாரும் கிடையாது. ஒருவேளை வழிகாட்டி யாரேனும் இருந்திருந்தால் இவ்விடத்திற்கு வந்திருக்கமுடியாது என்றுதான் நினைக்கிறேன். எனக்கு இசை தெரியாது தெரிந்துவிட்டால் அது முடிவுபெற்றுவிடும்.
இன்னும் கற்று வருகிறேன். பெரியவாளின் அருளினைப் பெற இங்கு வந்திருக்கிறேன். இதனை பெரும் பாக்யமாக நான் கருதுகிறேன்," என்றார்.
உத்திரப்பிரதேச ஆளுநர் ராம் நாயக்குக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.