Don't Miss!
- Finance திரும்பவுமா.. இன்போசிஸ் கொடுத்த ஷாக்கிங் செய்தி..! 20 வருடத்தில் முதல் முறையாக..!!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Automobiles காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இரண்டாவது முறையாக விருது பெறுவதில் மகிழ்ச்சி! - நா.முத்துக்குமார்
சென்னை: தொடர்ந்து இரண்டாவது முறையாக தேசிய விருது பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக பாடலாசிரியர் நா.முத்துக்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
"தங்க மீன்கள்' படத்துக்காக நான் எழுதிய 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்...' பாடல் முதல் முறையாக என்னை தேசிய விருது மேடைக்குக் கொண்டு சென்றது.
அதைத் தொடர்ந்து நிகழாண்டுக்கான தேசிய விருது பட்டியலிலும் எனது பெயர் சேர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக தேசிய விருது பெறுவது கூடுதல் மகிழ்ச்சி.
'சைவம்' படத்தில் இடம் பெற்ற 'அழகே அழகு...' பாடல் வாழ்வின் சில உன்னத விஷயங்களைச் சொல்லியிருக்கும். அந்தப் பாடலுக்கான சூழலை உருவாக்கித் தந்த இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், இசையமைத்த ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது அடுத்தடுத்த பயணங்களுக்கான எரிபொருளாக இந்த விருது அமையும். தொடர்ந்து தரப்படும் இந்த மாதிரியான அங்கீகாரங்கள் எனது பொறுப்புகளை அதிகமாக்கியுள்ளன," என்றார் நா.முத்துக்குமார்.
தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் அதிக பாடல்களை எழுதி வருபவர் நா முத்துக்குமார்தான் என்பது குறிப்பிடத்தக்கது.