Don't Miss!
- Automobiles பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
- News இனி ஈசியா லோயர் பெர்த் கிடைக்கும்.. நாமலே சீட்டை செலக்ட் பண்ணிக்கலாம்! ரயில்களில் வரும் சூப்பர் வசதி
- Lifestyle கண்களில் இந்த அறிகுறி தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. உங்களுக்கு கண் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு...
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
வி4 விருதுகள்... பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்பு
வி 4 விருதுகள் வழங்கும் விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
எம்.ஜி.ஆர் - சிவாஜி அகாடமி சார்பில் ஆண்டுதோறும் புத்தாண்டின் முதல் நாளில் சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.
2014 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நேற்று (01.01.2015) மாலை 6.30 மணியளவில் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.
என்.கே.விஸ்வநாதன், பிலிம் நியூஸ் அனந்தன், ஜூடோரத்னம், மித்ராதாஸ், தோட்டாதரணி, வியட்நாம்வீடு சுந்தரம், ரங்கம்மாள், சங்கர்கணேஷ் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் நெப்போலியன், சத்யராஜ், பிரபு, சந்திரசேகர், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், பட்டியல் சேகர் மற்றும் கே.ராஜன், அமுதா துரைராஜ், ருக்மாங்கதன், கவிஞர் பிறைசூடன், தயாரிப்பாளர் காட்ரகட்ட பிரசாத், நளினி, பாண்டியராஜன், எஸ்.எ.சந்திரசேகர், டி.ஜி.தியாகராஜன், சுஹாசினி மணிரத்தனம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சிறந்த இயகுநர்களுக்கான விருது, இயக்குநர்கள் வினோத் ( சதுரங்கவேட்டை ), பார்த்திபன் (கதை திரைக்கதை வசனம் இயக்கம்), எழில் ( வெள்ளக்காரதுரை), ராஜபாண்டி (என்னமோ நடக்குது), முத்துராமலிங்கன் ( சினேகாவின் காதலர்கள்), விஜய்மில்டன் (கோலிசோடா) ஞானராஜசேகரன் ( ராமானுஜன்) டீகே ( யாமிருக்க பயமேன்), கார்த்திக்கிரிஷ்( கப்பல்), மகிழ்திருமேணி ( மீகாமன்), பிரவீன்காந்த் (புலிப்பார்வை), சுசீந்திரன் ( ஜீவா), வேல்ராஜ் (வேலை இல்லா பட்டதாரி), கிருஷ்ணா( நெடுஞ்சாலை) இளையதேவன் ( ஞானகிருக்கன்), பிரபுசாலமன் ( கயல்) ஆனந்த்சங்கர் ( அரிமாநம்பி), கெளரவ் ( சிகரம்தொடு) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த கதைக்கான விருதினை பொன்குமரன் ( லிங்கா) பெற்றார்.
மற்ற விருதுகளைப் பெற்றவர்கள் விவரம்:
சிறந்த இசையமைப்பாளர்கள் (இமான், அனுருத்)
சிறந்த வசனம் - பாலாஜி மோகன் (வாயை மூடி பேசவும்)
சிறந்த நகைச்சுவை நடிகர் விருது - நடிகர் (விவேக், சூரி)
சிறந்த குழந்தை நட்சத்திரம் சத்யதேவ் (புலிப்பார்வை)
சிறந்த திரைக்கதை கார்த்திக் சுப்பராஜ் ( ஜிகர்தண்டா)
சிறந்த ஒளிப்பதிவாளர் - கே.எஸ்.செல்வராஜ்
சிறந்த படத்தொகுப்பாளர் - விஜயகுமார் ( அப்புச்சி கிராமம்)
சிறந்த படத்தொகுப்பாளர்- தேவா ( மஞ்சப்பை )
சிறந்த ஸ்டன்ட் இயக்குனர் -ஸ்டன்ட் சிவா
சிறந்த டிசைனர்- மேக்ஸ்
சிறந்த நடன இயக்குனர்- காயத்ரி ரகுராம்
சிறந்த புகைப்படக் கலைஞர் விருது - சுரேஷ் (டாப் டென் சினிமா )
சிறந்த ப்ரிவியு தியேட்டர் - 4 பிரேம்ஸ்
சிறந்த பி.ஆர்.ஓ - கண்ணதாசன், பாரிவள்ளல்,ஈ.வெ.ரா.மோகன்
சிறந்த போட்டோ லேப் - போட்டோ சைன்ஸ்
சிறந்த புதுமுக நடிகர்கள் - சந்தோஷ் ( கதை திரைக்கதை வசனம் இயக்கம்), சந்திரன் (கயல்), கஜேஷ் ( கல்கண்டு), வீரா ( மொசக்குட்டி)
சிறந்த புதுமுக நடிகைகள் - ஷிவதா ( நெடுஞ்சாலை), நந்திதா
சிறந்த நடிகர்கள்- ஆரி (நெடுஞ்சாலை), விமல் (மஞ்சப்பை ), சிபிராஜ் ( நாய்கள் ஜாக்கிரதை), நகுல்( வல்லினம் ), பாலாஜி ( நாய்கள் ஜாக்கிரதை) யோகி தேவராஜ் (கயல்), பிளாரன்ட் பெரைரா(கயல்), அபினய் ( ராமானுஜன் ), சதீஷ் (மான் கராத்தே)
சிறந்த நடிகை - தன்ஷிகா,
சிறந்த குணச்சித்திர நடிகை - சஞ்சனாசிங்
சிறந்த தயாரிப்பாளர் - மனோபாலா (சதுரங்கவேட்டை)
-போன்ற விருதுகள் வழங்கப்பட்டது.
விழாவில் லஷ்மன் ஸ்ருதி குழுவினரின் இசை நிகழ்ச்சியும், நடன இயக்குனர் காயத்ரிரகுராம் குழுவினரின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.