நா முத்துக்குமார்
Born on 12 Jul சென்னை
நா முத்துக்குமார் பயோடேட்டா
நா.முத்துக்குமார், தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். பல்லேலக்கா, என் காதல் சொல்ல, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற பல பாடல்களை இவர் எழுதியவையே .
காஞ்சிபுரம் மாவட்டதில் உள்ள கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் இவர், நான்கு வயதில் தாயை இழந்தவர். சிறு வயதில் இருந்தே புத்தகங்களை உலகமாக கொண்டார். தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் உதவி இயக்குனராக பணியாற்றினார். இதுவரை கிட்டதட்ட 1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள இவர், தற்போதைய தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராவார்.
இவர் 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்.