twitter

    ராதிகா சரத்குமார் பயோடேட்டா

    இராதிகா (ராதிகா சரத்குமார்) தென்னிந்திய திரையுலகில் 1980 முதல் 1995-ஆம் காலகட்டங்களில் முன்னணி நடிகையாக அறியப்பட்ட நடிகை ஆவார். இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் மற்றும் அரசியல்வாதியான சரத்குமார் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

    ராதிகா சரத்குமார் தற்போது திரையுலகில் தாய் மற்றும் கௌரவ கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார். இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் பிரபலமானவர்.

    பிறப்பு

    ராதிகா இலங்கையில் கொழும்பு என்ற நகரில் 1962-ம் ஆண்டு ஆகஸ்டு 21-ம் தேதி நடிகர் எம்.ஆர்.ராதாவுக்கும், அவரின் மூன்றாம் மனைவி கீதாவிற்கும் பிறந்தவர் ராதிகா. நடிகை நிரோஷா, திரைப்படத் தயாரிப்பாளர் ராதா மோகன் ஆகியோர் இவருடன் உடன்பிறந்தவர்கள். நடிகரும் அரசியல்வாதியுமான ராதாரவி இவருடைய உடன்பிறவா சகோதரர் ஆவார்.

    திரையுலக தொடக்கம் / அறிமுகம்

    பிறப்பால் திரைக்குடும்பத்தை சேர்ந்துள்ள இவர், அதன் அறிமுகம் கொண்டே எளிதில் திரிக்கைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் 1978-ஆம் ஆண்டு தமிழில் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். 

    தமிழ் திரைப்படங்களின் மூலம் திரையுலகில் அறிமுகமாகியுள்ள இவர், இதன் பிரபலத்தை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து இந்திய அளவில் புகழ்பெற்றுள்ளார்.

    இவரின் திரைபிரபலத்தின் மூலம் இவர், தென்னிந்தியாவில் சின்னத்திரையிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

    பிரபலம்

    வெள்ளித்திரையில் இவரின் பிரபலத்தை தொடர்ந்து சின்னத்திரையிலும் அறிமுகமாகி வெற்றியடைந்தவர். இவர் திரைப்படங்களில் நடிப்பதை தொடர்ந்து திரையுலகில் ராடன் மீடியா (Radaan Media Works (I) Limited) என்ற தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரும் இவரே, இதன் மூலம் பல தமிழ் திரைப்படங்களையும், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரிக்கின்றார்.

    அங்கீகாரம்

    இந்தியாவில் பல்வேறு மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான இவரின் பிரபலத்தை கண்டு இந்திய அரசு மற்றும் திரைத்துறை சார்ந்த இயங்கும் பல அமைப்புகள் இவருக்கு பல விருதுகளை வழங்கியுள்ளது.

    2019-ஆம் ஆண்டு மார்க்கெட் ராஜா திரைப்படத்தில் நடித்து வந்துள்ள இவர், அந்த படத்தின் பாராட்டு விழாவில் இவரை கௌரவவித்து இவருக்கு திரையுலகின் "நடிகவேள் செல்வி" என்ற பட்டத்தினை வழங்கியுள்ளனர் படக்குழுவினர்.

    தொலைக்காட்சி அனுபவம்

    திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருந்த இவர் 1991-ஆம் ஆண்டு பெண் என்ற தொடரில் நடித்து தொலைக்காட்சியில் நடிக்க தொடங்கியுள்ளார். இதற்கு பின்னர் இவர் மீண்டும் மீண்டும் நான், மறுபிறவி என சில தொடர்களில் நடித்து வந்துள்ள இவர், 1999-ஆம் ஆண்டு சித்தி என்னும் மெகாத்தொடர் ஒன்றில் நடிக்க தொடங்கியுள்ளார். சித்தி தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடர் தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று பிரபலமானது.

    சித்தி தொடரினை தொடர்ந்து இவர், அண்ணாமலை, செல்வி, அரசி என பல தொடர்களில் சன் தொலைக்காட்சியில் நடித்து பிரபலமாகியுள்ளார்.

    திருமணம்

    ராதிகா நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரை 2001 ஆம் ஆண்டில் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு இராகுல் என்ற மகன் 2004 ஆம் ஆண்டில் பிறந்தார். சரத்குமாரை திருமணம் புரிய முன்னர் ராதிகா இரு முறைகள் திருமணம் புரிந்து விவாகரத்துப் பெற்றவர். முதல் முறை மலையாள நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தனையும், பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சார்டு ஹார்டி என்பவரையும் திருமணம் புரிந்தார். ஹார்டியுடன் இவருக்கு ரயான் ஹார்டி என்ற பெண் குழந்தை உண்டு.