Don't Miss!
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- News அசத்திட்டாங்க இஸ்லாமியர்கள்.. இதுதான் எங்க தமிழ்நாடு.. நாட்டிற்கே உதாரணமாய் மாறிய தஞ்சாவூர் திருவிழா
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இதைக் கேட்டியளா...!
சென்னை: நம்ம ஊர் "சமத்து" நடிகைக்கும், அந்த ஊர் "சைத்து" நடிகருக்கும் இடையிலான காதல் ரொம்ப முற்றி இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்து வருவது பழைய செய்தி.
இப்போது புதிய செய்தி என்ன தெரியுமா.. நடிகைக்கு ஒரு புதுக் கவலை தொற்றிக் கொண்டுள்ளதாம். இந்த வாழ்க்கை இப்படியே நிலைக்குமா அல்லது பாதியிலேயே பாப் கார்ன் போல கருகிப் போய் விடுமா என்ற சந்தேகம்தான்.
நடிகையின் கவலைக்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது. காரணம், சைத்து நடிகர் சற்று பிளேபாய் டைப்பாம். நிறைய நடிகைகளுடன் அவருக்கு நல்ல நட்பு உள்ளதாம். இது இப்போதும் தொடர்கிறதாம், எப்போதும் தொடரும் என்றும் நடிகர் கூறி விட்டாராம். இதுதான் நடிகையை முதுகெலும்பு வரை கவலை கொள்ளச் செய்துள்ளதாம்.
இப்படியே விட்டால் நம்மவர் நிரந்தரமாக நம்மிடம் இல்லாமல் இடையில் தாவி வேறு மரத்திற்குப் போய் விட்டால் நம்ம கதி என்னாகும் என்பதுதான் அந்த பல்லாவரம் நடிகையின் ஒஸ்தி கவலையாக இருக்கிறதாம்.
இதனால் லிவ் இன் வாழ்க்கையை அப்படியே ரெஸ்ட் ஆப் லைப் வரை தக்க வைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்ய ஆரம்பித்துள்ளாராம். முதல் கட்டமாக விரைவில் அதிகாரப்பூர்வமாக தாலி கட்டத் தேவையான வேலைகளி்ல் குதித்துள்ளாராம்.
நல்லபடியா இருந்தா சரித்தான்.