Don't Miss!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Lifestyle ஃபேஸ்க்கு என்ன பண்ணாலும் பலன் இல்லையா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்...
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'பாடகி' ஆசையால் பணத்தை இழந்த 'பேய்' நடிகை!
சென்னை: பாடகி ஆசையால் சேமித்த பணத்தையெல்லாம் இழந்து ஆயிரத்தில் ஒருத்தியான நடிகை தவித்து வருவது தான், கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாக்.
ஓரளவு பாடத் தெரிந்தாலே இசை ஆல்பம் தயாரித்து வெளியிடுவது நடிகர், நடிகையரின் வழக்கமாக மாறிவருகிறது. இதற்கு அந்த அரண்மனை நடிகையும் தப்பவில்லை.
நடித்துக்கொண்டே பாடல்களைப் பாடி வந்தவருக்கு சொந்தமாக ஆல்பம் தயாரித்து வெளியிட வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாம்.
இதனால் சேமித்து வைத்த பணத்தையெல்லாம் போட்டு தானே சொந்தமாகப் பாடி, ஆல்பம் ஒன்றையும் தயாரித்து விட்டார். ஆனால் எப்படியும் விற்று விடலாம் என்றிருந்த நடிகையின் கனவில் மண் விழுந்து விட்டது.
ஒவ்வொரு கம்பெனியாக ஏறி, இறங்கியும் ஆல்பத்தை வாங்க ஆளில்லையாம்.இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை இனிமேல் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது என்று சபதமெடுத்திருக்கிறாராம்.
இதனால் தான் சமீப காலமாக நடிக்க வரும் எல்லா வாய்ப்புகளையும் நடிகை ஏற்றுக்கொள்ள காரணம் என்று விவரம் தெரிந்தவர்கள் கிசுகிசுக்கின்றனர்.