Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அசிஸ்டெண்டுகளின் வாழ்க்கையில் விளையாடும் அருவா இயக்குநர்!
வேக வேகமாக படம் எடுப்பதில் கமர்ஷியல் கில்லாடி அந்த இயக்குநர். அவர் இயக்கிய ஒரு படத்தின் மூன்றாம் பாகம் அடுத்த வராம் வரவிருக்கிறது. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் இயக்குநர் உதவி இயக்குநர்களுக்கு கிள்ளிக்கூட கொடுப்பதில்லை. அது மட்டுமல்ல... இந்த தன்மானம் என்ற ஒரு வஸ்து இருப்பவர் யரௌம் இயக்குநரிடம் உதவியாளராக இருக்கவே முடியாதாம்.
மாட்டுக்கு கூட ப்ளூ க்ராஸ் இருக்கு... பீட்டா இருக்கு... ஆனால் இவரோ உதவி இயக்குநர்களை மாடு, நாயை விட கேவலமாக நடத்துவாராம். ஸ்பாட்டில் அவர் ஒரு ஜீன்ஸ் போட்ட சாடிஸ்ட். அசிஸ்டெண்ட்களை ஸ்பாட்டில் எல்லோர் முன்பு அடித்து காயப்படுத்தி அழ வைப்பது தான் இவரின் பொழுதுபோக்கு.
அது மட்டுமல்ல தனது அசிஸ்டென்ட்கள் ஏதாவது படம் கமிட் ஆனால் அந்த கம்பெனிக்கு போனடித்து அதனைக் கெடுத்தும் விடுவார். இதையெல்லாம் மீறி ஒரு அசிஸ்டெண்ட் தான் முதன்முறையாக இயக்குநரிடம் இருந்து வந்து படம் எடுத்திருக்கிறார்.
பிரபல டான்ஸ் மாஸ்டரின் சகோதரரை வில்லனாக்கி எடுத்த அந்த படம் இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. காரணம் இயக்குநர்தான். அது ரிலீஸ் ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே லட்சக்கணக்கில் செலவு செய்து தடுக்கிறாராம்.
மனுஷனாய்யா நீ?