Don't Miss!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Finance திரும்பவுமா.. இன்போசிஸ் கொடுத்த ஷாக்கிங் செய்தி..! 20 வருடத்தில் முதல் முறையாக..!!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மேக்கப் போட்டு திட்டு வாங்கிய மெட்ராஸ் நாயகி
சென்னை: சென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் நாயகனின் மனங்கவர்ந்த அரசியாக நடித்து, ரசிகர்களைக் கவர்ந்தவர் அந்த நடிகை.
அந்தப் படத்திற்குப் பின்னர் வேறு படங்கள் எதுவும் நடிகைக்கு சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. இந்நிலையில் தற்போது சங்கச் செயலாளருடன் நாட்டியத்தை மையமாகக் கொண்ட படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை எடுத்து வரும் குழந்தை இயக்குனருக்கு இவர் அதிகமாக மேக்கப் போட்டுக் கொள்வது பிடிக்கவில்லையாம். இதனை நேரடியாக சொல்லாமல் ஜாடைமாடையாக தனது உதவி இயக்குனர்கள் மூலம் சொல்லிப் பார்த்தார்.
இயக்குனரின் பேச்சுக்களை காதில் வாங்கிக் கொள்ளாத நாயகி தனது மேக்கப் படலத்தை சந்தோஷமாக தொடர்ந்து வந்தாராம். இதனால் கோபமடைந்த இயக்குநர் சமீபத்தில் நடிகையைக் கண்டபடி திட்டி விட்டாராம்.
நடிகையைத் திட்டும்போது நிறைய மேக்கப் போடாதே, வேஷம் போட்ட மாதிரி இருக்கிறது என்று கூறியதில் பயந்து போன நடிகை இப்போது முகத்துக்கு பவுடர் கூட பூசுவதில்லையாம்.
இதைக் கேள்விப்பட்டவர்கள் என்னது அந்த இயக்குநர் திட்டினாரா என்று ஆச்சரியத்துடன் கேட்கின்றனராம்.