Don't Miss!
- News யாருக்கோ தூக்கம் போயிட்டுனு சொல்றாங்க.. ஸ்டாலின், உதயநிதிக்கு தான் தூக்கம் போய்விட்டு.. எடப்பாடி
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மறந்தும் இதை செய்ய வேண்டாம் 'மீண்டும்' கட்டளையிட்ட தளபதி
சென்னை: தேர்தல் நெருங்க, நெருங்க ரசிகர்களுக்கு சில கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறாராம் தளபதி நடிகர்.
ஏற்கனவே தேவையில்லாத வாசகங்கள் மற்றும் வசனங்கள் அடங்கிய போஸ்டர்கள், பேனர்கள் வைக்கக் கூடாது.அப்படி, இப்படி என்று உதார் விட்டுப் பேசுவது கூடாது.
முக்கியமாக ஆளுங்கட்சியை எந்தக் காரணம் முன்னிட்டும் வம்பிழுக்கக் கூடாது என்று தனது ரசிகர்களுக்கு கட்டளையிட்டிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் சில கடும் உத்தரவுகளை ரசிகர்களுக்கு தளபதி பிறப்பித்து இருக்கிறாராம். அதில் தனது பெயரில் உள்ள இயக்கம் சார்பில், எந்தக் கட்சிக்கும் ஆதரவு கொடுக்கக் கூடாது என்பது முக்கியமான உத்தரவாம்.
கடைசியாக வெளியான அந்த இரண்டெழுத்துப் படம் போல, இந்த காக்கிப் படமும் ஆகக்கூடாது என்பதில் நடிகர் மிகவும் கவனமாக இருக்கிறாராம்.
அதனால் தான் எந்த வழியில் பிரச்சினை வரும் என்று தெரிந்தாலும், உடனடியாக அதில் தலையிட்டு வருவதாகக் கூறுகின்றனர்.
தேர்தல் நெருங்கி வரும்போது இன்னும் எத்தனை கட்டளைகளோ? என்ற கிண்டல்கள் தற்போது கோலிவுட்டில் எழத் தொடங்கியிருக்கிறது.