Don't Miss!
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
'காட்டை'த் தாண்டி 'கடலுக்குள்' அடி எடுத்து வைத்து கலக்கத்தில் மூழ்கிய 'சந்தோஷ' நாயகி!
சென்னை: காட்டை கடந்து கடலுக்குள் அடி வைத்து வைத்திருக்கும் பிரபல இயக்குநரின் படத்தில் நாயகியாக அறிமுகம் ஆகிறார் இந்த சந்தோஷமான நடிகை. முன்னதாக இயக்குநரின் படத்தில் நாயகியாக நடித்தவர்கள் தற்போது தமிழில் முன்னணி நடிகைகளாக வலம் வருகின்றனர். எனவே, தனக்கும் தமிழில் நிச்சயம் நல்லதொரு இடம் காத்துக் கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையில் இந்த நடிகை இருந்தார்.
ஆனால், சமீபகாலமாக நடிகை ரொம்பவும் சோகமாக உள்ளாராம். படம் ரிலீசாக உள்ள நிலையில் ஏன் இந்த சோகம் எனக் கேட்டால், அவர் தெலுங்கில் நடித்த படங்கள் தான் காரணம் என்கிறார்கள் விசயம் தெரிந்தவர்கள்.
சினிமாவுக்கு வந்த புதிதில் தெலுங்கில் கிடைத்த குட்டி குட்டி வேடங்களில் நடித்துள்ளாராம் நடிகை. பால் நடிகையின் முதல் படத்தைப் போல, சந்தோஷமான நடிகையும் சர்ச்சைக்குரிய படங்கள் பலவற்றில் நடித்துள்ளாராம்.
தமிழில் பிஷ் படம் ரிலீசானதும், அப்பழைய படங்களை தூசு தட்டி தமிழில் டப்பிங் பண்ண சிலர் ஐடியா செய்துள்ளனராம். அப்படங்கள் ரிலீசானால் தமிழில் தனது மார்க்கெட் கேள்விக்குறி ஆகிவிடும் என நடிகை அஞ்சுகிறாராம்.
இது தான் சந்தோஷமான நடிகையின் சோகத்தின் பின் உள்ள கதையாம் !