twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'காட்டை'த் தாண்டி 'கடலுக்குள்' அடி எடுத்து வைத்து கலக்கத்தில் மூழ்கிய 'சந்தோஷ' நாயகி!

    |

    சென்னை: காட்டை கடந்து கடலுக்குள் அடி வைத்து வைத்திருக்கும் பிரபல இயக்குநரின் படத்தில் நாயகியாக அறிமுகம் ஆகிறார் இந்த சந்தோஷமான நடிகை. முன்னதாக இயக்குநரின் படத்தில் நாயகியாக நடித்தவர்கள் தற்போது தமிழில் முன்னணி நடிகைகளாக வலம் வருகின்றனர். எனவே, தனக்கும் தமிழில் நிச்சயம் நல்லதொரு இடம் காத்துக் கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையில் இந்த நடிகை இருந்தார்.

    Happy actress is now unhappy

    ஆனால், சமீபகாலமாக நடிகை ரொம்பவும் சோகமாக உள்ளாராம். படம் ரிலீசாக உள்ள நிலையில் ஏன் இந்த சோகம் எனக் கேட்டால், அவர் தெலுங்கில் நடித்த படங்கள் தான் காரணம் என்கிறார்கள் விசயம் தெரிந்தவர்கள்.

    சினிமாவுக்கு வந்த புதிதில் தெலுங்கில் கிடைத்த குட்டி குட்டி வேடங்களில் நடித்துள்ளாராம் நடிகை. பால் நடிகையின் முதல் படத்தைப் போல, சந்தோஷமான நடிகையும் சர்ச்சைக்குரிய படங்கள் பலவற்றில் நடித்துள்ளாராம்.

    தமிழில் பிஷ் படம் ரிலீசானதும், அப்பழைய படங்களை தூசு தட்டி தமிழில் டப்பிங் பண்ண சிலர் ஐடியா செய்துள்ளனராம். அப்படங்கள் ரிலீசானால் தமிழில் தனது மார்க்கெட் கேள்விக்குறி ஆகிவிடும் என நடிகை அஞ்சுகிறாராம்.

    இது தான் சந்தோஷமான நடிகையின் சோகத்தின் பின் உள்ள கதையாம் !

    English summary
    The happy actress who is acting in a fish film now is very upset as some producers have decided to release her controversial Telugu films in Tamil.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X