Don't Miss!
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சரவணா.. நெசமாப்பா இது...???
சென்னை: சரவணன் மீனாட்சி சீரியல் புகழ் நடிகர் செந்திலுக்கும், இனியா நடிகைக்கும் இடையே காதல் தீ பற்றிக் கொண்டு கொளுந்து விட்டு எரிவதாக பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள் கோலிவுட்டில்.
எல்லாம், 35 நாட்களில் ஏற்பட்ட காதலாம். மலேசியாவில் படப்பிடிப்புக்காகப் போன இடத்தில்தான் இந்த மேட்டர் ஏற்பட்டதாகவும் சொல்லிக் கொள்கிறார்கள்.
இருவரும் இணைந்து கண் பேசும் வார்த்தைகள் என்ற படத்தில் ஜோடி போட்டு நடித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
மதுரை குலுங்க...
மதுரை சீரியல்தான் செந்திலுக்கு முதல் நடிப்புக் களம். ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக வலம் வந்தவரைப் பிடித்து மதுரை சீரியலில் சரவணனாக சிலம்ப வைத்து அசத்தினர்.
மீனாட்சியுடன் மறு ஜோடி
அந்த சீரியல் வெற்றியைத் தொடர்ந்து அதில் ஜோடியாக நடித்த செந்திலும், ஸ்ரீஜாவும் சரவணன் மீனாட்சி தொடரிலும் ஜோடி போட்டு கலக்கிக் கொண்டுள்ளனர்.
மீனாட்சி போய் இனியா
இப்போது செந்தில் ஹீரோவாகி விட்டார். அதாவது சினிமாவில். அவருக்கு ஜோடி போட்டிருப்பவர் இனியா.. இருவரும் இணைந்து கண் பேசும் வார்த்தைகள் படத்தில் நடித்துள்ளனர்.
மலேசியாவில் 35 நாள் டேரா
இந்தப் படத்தின் ஷூட்டிங்குக்காக மலேசியா போயிருந்தனராம். அங்கு 35 நாட்கள் தங்கி நடித்தனராம்.
அந்தத் தங்கலில்தான்...
அப்படி தங்கி நடித்தபோது செந்திலுக்கும், இனியாவுக்கும் இடையே பற்றிக் கொண்டு விட்டதாம். இருவரும் நெருங்கிய நண்பர்களாகி அப்படியே காதலர்களாகி இப்போது இணை பிரியா ஜோடிகளாக மாறி விட்டனராம்.
என் இனிய இனியாவே...
இப்போதெல்லாம் செந்தில் வாயைத் திறந்தாலே இனியாவின் பேச்சாகத்தான் இருக்கிறதாம். இனியாவுடன் அலைபேசியில்அலைபாய்ந்தபடி இருக்கிறாராம். இனியாவுக்கும் அப்படியேதானாம்...
டும் டும்மா.. இல்லை டம் டமாரா...
இப்போது இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா அல்லது பிரண்ட்லியாக மட்டுமேவா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்து நிற்கிறது.