Don't Miss!
- Technology தூக்குங்கடா செல்லத்தை.. Apple போட்ட டைட்டானியம் ரோஸ்மில்க்.. கண்ணை பறிக்கும் சுவாரசியமான iPhone 16 லீக்ஸ்..
- News மோடியிடம் கொடுத்த ராஜினாமா கடிதம்? திமுகவை விட்டு விலகியது ஏன்? ரகசியம் உடைத்த பாரிவேந்தர்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மும்பை விழாவில் அக்கா நடிகையை கண்டுகொள்ளாத ஸ்டைல் நடிகர், சுள்ளான்
மும்பை: நேற்று முன்தினம் மும்பையில் நடந்த விழாவில் கலந்து கொண்ட ஸ்டைல் நடிகரும் அவரின் சுள்ளான் மருமகனும் முத்த நாயகனின் மூத்த மகளை கண்டுகொள்ளவே இல்லையாம்.
முத்த நாயகனின் மூத்த மகள் ஸ்டைல் நடிகரின் மூத்த மகளின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்தார். அந்த படத்தில் நடிக்கையில் ஸ்டைல் நடிகரின் சுள்ளான் மருமகனுக்கும், முத்த நாயகனின் மகளுக்கும் இடையே காதல் தீ பற்றிக் கொண்டது என்றும், இது குறித்து அறிந்த இரண்டு ஜாம்பவான்களும் காதல் ஜோடியை பிரித்து வைத்ததாகவும் பேச்சாகக் கிடந்தது.
இந்த சம்பவத்தை அடுத்து தான் முத்த நாயகன் தனது நடிகை மகளை மும்பையில் வீடு பார்த்து குடியமர்த்தினார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் நடந்த விழா ஒன்றில் ஸ்டைல் நடிகர், அவரது மூத்த மகள், சுள்ளான், முத்த நாயகன், அவரது 2 மகள்கள் மற்றும் முன்னாள் மனைவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் ஸ்டைல் நடிகரும் சரி, சுள்ளானும் சரி முத்த நாயகனின் இளைய மகளுடன் சிரித்து சிரித்து பேசினார்களே தவிர அவர் பக்கத்திலேயே நின்ற அவரது அக்காவை கண்டுகொள்ளக் கூட இல்லையாம். இத்தனைக்கும் அக்கா நடிகை பக்கத்தில் இருந்து அவர்கள் பேசுவதை சிரித்தபடியே பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்படி இருந்தும் கண்டுகொள்ளவில்லையாம்.
அப்படி ஒரு ஜீவன் விழாவுக்கு வந்ததாகவே மாமனாரும், மருமகனும் நினைக்கவில்லையாம். சுள்ளானின் மனைவியும் முத்த நாயகனின் மூத்த மகளை கண்டுகொள்ளவில்லையாம். இதற்கு எல்லாம் அந்த காதல் விவகாரம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.