Don't Miss!
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வாரிசு நடிகையின் ‘விலகல் - நெருங்கல்’ நாடகம்... அதிக சம்பளத்திற்காகத் தானாம் !
சென்னை: எப்படியும் ஆயுதப் பெயரைக் கொண்ட படம் தீபாவளிக்கு ரிலீசாகி விடும் என்ற நம்பிக்கையில், அப்பட நாயகனின் அடுத்த பட வேலைகள் வேகம் பிடித்துள்ளதாம். இப்படத்திற்காக சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பத்து ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்டமான செட் ஒன்று போடப்பட்டுள்ளதாம்.
இது ஒருபுறம் இருக்க, வாரிசு நடிகை இப்படத்தில் நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், தானே பூடகமாக அதனை மறுப்பது போல தனது சமூக வலைதளப் பக்கத்தில் தகவலை வெளியிட்டார் நடிகை.
ஆனால், தற்போது மீண்டும் வாரிசு நடிகையையே அப்படத்தில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளதாம் படத் தயாரிப்பு. முதலில் நடிகை நோ எனச் சொன்னதற்கும், தற்போது ஓகே எனச் சொன்னதற்கும் பின்னணியில் ஒரே ஒரு காரணம் தானாம்.
அதாவது அதிக சம்பளம். தெலுங்குப் படங்களில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடுவதற்கே நடிகை பெரும் தொகையை சம்பளமாக வாங்குகிறார். அப்படி இருக்கையில் தமிழில் நாயகியாக நடிப்பதற்கு மிகப் பெரிய தொகையை நடிகை எதிர்பார்த்ததாகக் கூறப்படுகிறது.
முதலில் அதற்கு படத்தயாரிப்பு ஒத்துக் கொள்ளாததாலேயே, சூசகமாக படத்திலிருந்து விலகுவதாக சமூக வலைதளப் பக்கத்தில் மிரட்டல் விடுத்தார் நடிகை என்கிறார்கள். பின்னர், ஒரு வழியாக நடிகை கேட்ட சம்பளத்திற்கு தயாரிப்புத் தரப்பு சம்மதம் தெரிவித்ததால், படத்தில் நடிக்க நடிகையும் ஓகே சொல்லி விட்டார் என்கிறார்கள் படத்தயாரிப்புக்கு நெருக்கமானவர்கள்.