Don't Miss!
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
30 லட்சம் கொடுங்க...வளரும் நடிகையின் கோரிக்கையால் ஆடிப்போன 'சாண்டல்வுட்'
சென்னை: வளரும் தீப நடிகையின் கோரிக்கையால் காமெடியனிலிருந்து ஹீரோவாக மாறிய சாண்டல்வுட் நடிகர் ஆடிப் போயிருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகிய சாண்டல்வுட் நடிகர் மிகவும் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடியனாக மாறினார்.
தொடர்ந்து பல படங்களில் ஹீரோவைவிட இவரின் காட்சிகளையே தமிழர்கள் அதிகம் பார்க்கும்படி நேரிட்டது. "எத்தனை நாளைக்குத் தான் ஊரான் காதலை ஊட்டி வளர்ப்பது நாமும் ஊட்டி போய் டூயட் பாடினால் என்ன"
என்ற சிந்தனை திடீரென்று இவருக்கு வந்ததில் ஒரு சுபயோக சுப தினத்தில் இனிமேல் நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பேன் என்று அறிக்கை விட்டு சக ஹீரோக்களுக்கு ஷாக் கொடுத்தார்.
மேலும் இவர் ஹீரோவாக நடித்த படங்களும் முதலுக்கு மோசமில்லாமல் ஓட தற்போது முழுநேர நடிகராகவே மாறிவிட்டார்.
இந்நிலையில் இவரின் அடுத்த படத்திற்கு ஹீரோயினாக நடிக்க முன்னணி நடிகைகளை அணுகியபோது பலரும் தயக்கம் காண்பித்தனராம்.
வேறு வழியில்லாமல் வளர்ந்து வரும் தீப நடிகையை அணுகியபோது நடிக்க சம்மதம் தான் ஆனால் 30 லட்சம் கொடுத்தால் நடிக்கிறேன் என்று நிபந்தனை விதித்திருக்கிறாராம்.
ஆடிப் போன சாண்டல்வுட் தற்போது சம்பளத்தை குறைப்பது தொடர்பாக அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.