Don't Miss!
- News முஸ்லிம்களின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் குறைவு! சொல்வது அரசு டேட்டா! ஆனால் மோடி ஏன் அப்படி பேசினார்
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸைமிஸ் பண்ணிடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
5 நாட்கள்... 5000 ரசிகர்களுடன் படமெடுத்துக் கொண்ட ரஜினி!
ராகவேந்திரா மண்டபம் அமைந்துள்ள சாலை திருவிழாக் களை கட்டியிருந்தது கடந்த 5 நாட்களாக. ஒரு மாவட்டத்திலிருந்து ரஜினியைச் சந்திக்க 300 பேர் பஸ்கள், வேன்கள் அமர்த்திக் கொண்டு வருகிறார்கள் என்றால், அதே மாவட்டத்திலிருந்து நூற்றுக்கும் அதிகமான ரசிகர்கள் சொந்த வாகனங்களில் வந்து குவிந்தார்கள். அவர்கள் வாகனங்களை நிறுத்த அருகிலிருந்த ஒரு பள்ளி வளாகத்தை பணம் கொடுத்து ஏற்பாடு செய்திருந்தனர்.
நாளொன்றுக்கு மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்கள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கிட்டத்தட்ட 1000 பேர். இவர்கள் பெரும்பாலும் மன்றத்தின் நிர்வாகப் பொறுப்புகளில் இருப்பவர்கள்.
இந்த முதல் கட்ட சந்திப்பில் 15 மாவட்டங்களைச் சேர்ந்த 5000 ரசிகர்கள் கலந்து கொண்டு படமெடுத்துக் கொண்டனர்.
தினசரி காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 12 மணி வரை படம் எடுக்கும் நிகழ்வு நடந்தது.
வந்த அனைத்து ரசிகர்களுக்கும் குளிர்ந்த குடிநீர், மோர் முதலில் வழங்கப்பட்டது. படம் பிடித்துக் கொண்டவர்கள் இடது பக்க வாயிலில் இறங்கி, கீழே உணவருந்தும் ஹாலுக்கு சென்று உணவு அருந்திய பிறகே செல்லுமாறு ஏற்பாடு செய்திருந்தனர்.
4வது நாளிலும், இறுதி நாளான நேற்றும் மட்டும் 300 செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், வீடியோ பதிவாளர்கள் ரஜினியுடன் படமெடுத்துக் கொண்டனர். ஏராளமான போலீசாரும் தாங்களும் படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என விரும்பியதால் அவர்களையும் ரஜினி அனுமதித்தார்.
மொத்தம் 5000க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் இந்த முதல்கட்ட சந்திப்பில் ரஜினி படம் எடுத்துக் கொண்டார். தமிழ் சினிமா மற்றும் அரசியல் அரங்கில் ஒரு நடிகரோ அல்லது தலைவரோ இவ்வளவு பேர்களுடன் தனித் தனியாக படமெடுத்துக் கொண்டது இதுவே முதல்முறை.
அடுத்த கட்டமாக மேலும் 15 மாவட்ட ரசிகர் மன்றத்தினரை அடுத்த மாதம் ரஜினி சந்திக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை அகில இந்திய ரஜினி ரசிகர்கள் தலைமை மன்ற நிர்வாகி விஎம் சுதாகர் செய்து வருகிறார்.
-
தனுஷ் - ஐஸ்வர்யா டைவர்ஸ் விஷயம்.. சிம்புவ ஏன் இதுல இழுக்குறீங்க.. போட்டுத்தாக்கிய பிரபலம்
-
குடிக்கிற காஃபியில் எதையோ கலந்த நடிகை.. பேச முடியாமல் திணறிய ரஜினி.. குட்டி பத்மினி சொன்ன சீக்ரெட்
-
தென்னிந்திய நைட்டிங்கேல் ஜானகி அம்மாவின் பிறந்தநாள்.. குரலில் எப்போதும் மழலையும், இளமையும் உண்டு