Don't Miss!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த அஜீத்... ரசிகர்கள் அன்புப் பரிசை ஏற்றுக் கொண்டார்
என்னை அறிந்தால் படம் பிப்ரவரி 5-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், நடிகர் அஜீத் திருப்பதி திருமலையில் சாமி தரிசனம் செய்தார்.
அங்கு குழுமிய தனது ரசிகர்களை நலம் விசாரித்தார். அவர்கள் தந்த அன்புப் பரிசை பெற்றுக் கொண்டதோடு, உடன் நின்று படமும் எடுத்துக் கொண்டார்.
வெள்ளை வேட்டி, சட்டை, தனது பிராண்ட் நரைத்த தாடியுடன் திருமலைக்கு வந்த அஜீத்தை, கோயில் நிர்வாகிகள் வரவேற்று சாமி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்தனர்.
சாமி தரிசனம் முடிந்து வெளியில் வந்த அஜீத்தை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களுடன் நின்று படங்கள் எடுத்துக் கொண்டார் அஜீத். சிலர் அவருக்கு பரிசாக திருப்பதி ஏழுமலையான் படத்தை அளித்தனர். அதைப் பெற்றுக் கொண்டு, ரசிகர்களை நலம் விசாரித்தார் அஜீத்.
பின்னர் அங்கிருந்து சென்னைக்கு கிளம்பினார்.
திருப்பதிக்கு அஜீத் செல்வது இது முதல் முறையல்ல. என்னை அறிந்தால் படத்துக்கு முன், வீரம் படம் முடிந்ததும் திருமலைக்குச் சென்று இயக்குநர் சிவாவுடன் மொட்டை போட்டுக் கொண்டு திரும்பியது நினைவிருக்கலாம்.