Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- News கோதுமை பீர்.. ஒரே ஒரு பீர் பாட்டில் விலை இவ்வளவா? இப்பவே குஷியில் குடிமகன்கள்.. ஆனாலும் "இடிக்குதே"
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பிறக்கும்போதே ஸ்டைலோடு பிறந்தவர் ரஜினி- அக்ஷய் குமார்
மும்பை: நடிகர் ரஜினி மிகவும் ஸ்டைலான மனிதர் என நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்திருக்கிறார்.
இந்தி நடிகர் அக்ஷய் குமார் 2.ஓ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் 50% படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் அக்ஷய் குமார் சமீபத்திய பேட்டியொன்றில் ரஜினி மற்றும் ஷங்கர் இருவர் குறித்தும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். '' ஷங்கர் ஒரு இயக்குநர் கிடையாது அவர் ஒரு விஞ்ஞானியைப் போன்றவர்.
ஒவ்வொரு படத்துக்கு முன்பும் மாதக்கணக்கில் ஆராய்ச்சி செய்தே அந்தப் படத்தை எடுக்கிறார். இயக்குநர் ஷங்கர் என்று கூறுவதை விட விஞ்ஞானி ஷங்கர் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.
ரஜினியைப் பொறுத்தவரையில் சினிமா மட்டுமல்லாது அவரது நிஜ வாழ்விலும் ஸ்டைல் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ரஜினி பிறக்கும்போதே ஸ்டைலோடு பிறந்தவர்'' என்று தெரிவித்திருக்கிறார்.
அக்ஷய் நடிப்பில் அடுத்ததாக 'ருஸ்தம்' திரைப்படம் வெளியாகவுள்ளது. இதில் கப்பற்படை அதிகாரியாக அவர் நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து 'ஜாலி எல்எல்பி' (மனிதன்) படத்தின் 2 வது பாகத்திலும் அக்ஷய் நடிக்கவிருக்கிறார்.