Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
'காவியத்தலைவன்' வசந்தபாலனுடன் கைகோர்க்கும் 'டிமாண்டி காலனி' அருள்நிதி
சென்னை: இயக்குநர் வசந்தபாலனின் அடுத்த படத்தில் நடிகர் அருள்நிதி ஹீரோவாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பாண்டிராஜின் 'வம்சம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் அருள்நிதி. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டிமாண்டி காலனி 2015 ன் வெற்றிப் படங்களில் ஒன்றாக மாறியது.
தற்போது இயக்குநர் அறிவழகனின் 'ஆறாது சினம்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அருள்நிதி தொடர்ந்து இயக்குநர் வசந்தபாலனின் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறுகின்றனர்.
2002 ம் ஆண்டு ஆல்பம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வசந்தபாலன், ஆல்பம் பெரியளவில் ஹிட்டடிக்காத நிலையில் 4 ஆண்டுகள் காத்திருந்து வெயில் மூலம் தன்னை நிரூபித்துக் காட்டினார்.
அங்காடித் தெரு, அரவாண், காவியத் தலைவன் என்று தொடர்ந்து தரமான படங்களை எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் வசந்தபாலன் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் அவரது படத்தின் ஹீரோவாக நடிக்கும் அதிர்ஷ்டம் அருள்நிதிக்குக் கிடைத்திருக்கிறது.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொங்கல் கழித்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.