Don't Miss!
- News நாங்க அப்பவே சொன்னோமே.. இவிஎம் பட்டனை தொட்டாலே பாஜகவுக்கு விழும் 2 ஓட்டு! காங்கிரஸ் புது டிமாண்ட்
- Finance Infosys: லாபத்தில் 30% உயர்வு, முதலீட்டாளர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் ரூ.28 ஈவுத்தொகை..!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Automobiles 35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
- Technology போட்டு தாக்கும் BSNL.. 300 ரூபாய்க்கு இப்படியொரு ரீசார்ஜ் திட்டமா? யாருக்கெல்லாம் இது பெஸ்ட் பிளான் தெரியமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
‘நோ ப்ராப்ளம்’... கன்னடத்தில் சிவ்ராஜ் குமாருக்காக ‘கொலைவெறி’ பாடிய தனுஷ்!
சென்னை: நடிகர் தனுஷ் கன்னடப் படமொன்றில் பாடல் பாடியுள்ளார். அப்பாடலின் வரி, ‘நோ ப்ராப்ளம்' எனத் தொடங்குகிறது.
தேசிய விருது வாங்கிய நடிகர் தனுஷ், சிறந்த பாடகர், பாடலாசிரியர் என்பது அனைவருக்கும் தெரியும். ஏற்கனவே, அவர் தனது புதுக்கோட்டையிலிருந்து சரவணன், தேவதையைக் கண்டேன், புதுப்பேட்டை உள்ளிட்ட பலப் படங்களில் பாடியுள்ளார்.
3 என்ற படத்தில் இவர் பாடிய ‘ஒய் திஸ் கொலைவெறி' பாடல் பட்டித் தொட்டியெங்கும் சென்றது. அதேபோல், அனேகன் படத்தில் இடம்பெற்ற ‘டங்காமாரி' பாடலும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் விரும்பப் படும் பாடலாக உள்ளது.
இதனால், தொடர்ந்து மற்ற நடிகர்களின் படங்களில் பாடும் வாய்ப்பும் தனுஷிற்கு வந்த வண்ணம் உள்ளது. அவற்றில் தமிழ்ப்படங்கள் மட்டுமின்றி, பிற மொழிப்படங்களும் அடக்கம்.
நடிப்பில் பிசியாக இருப்பதால், அவற்றில் குறிப்பிட்ட பாடல்களை மட்டுமே தேர்வு செய்து தனுஷ் பாடி வருகிறார். இந்நிலையில், கன்னட படத்திற்காக பாடல் ஒன்றை அவர் பாடியுள்ளார்.
கன்னடத்தில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவ்ராஜ் குமார், வஜ்ரகயா என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு தனுஷ் பாடினால் நன்றாக இருக்கும் என்று கருதி, அவரை பாட வைத்துள்ளனர்.
‘நோ பிராபிளம்' எனத் தொடங்கும் இந்தப் பாடல் அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.