Don't Miss!
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- News ஒன்னா இல்ல ரெண்டு ஓட்டு போடனுமா? வாக்குச் சாவடியில் குழம்பிய ராசாத்தி கருணாநிதி..! இது தான் காரணமா?
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மாமா எது செய்தாலும் அது சரியாகத் தான் இருக்கும்: ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தனுஷ்
சென்னை: ரஜினி எந்த முடிவு எடுத்தாலும் சரியாகத் தான் இருக்கும் என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.
8 ஆண்டுகள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அப்போது தான் அரசியலுக்கு வருவது குறித்து ரசிகர்கள் மத்தியில் பேசினார்.
கட்சிகள்
அரசியலுக்கு வாங்க வாங்க என்று கட்சியினர் அழைத்தபோது எல்லாம் ரஜினி கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் அரசியலுக்கு வருவது குறித்து அவராக பேசியது பலரையும் வியக்க வைத்துள்ளது.
தனிக்கட்சி
ரஜினியை தங்கள் பக்கம் இழுக்க சில கட்சிகள் திட்டம் தீட்டின. ஆனால் ரஜினியோ எந்த கட்சியிலும் சேராமல் புதுக்கட்சி துவங்கப் போவதாக கூறப்படுகிறது.
ரஜினி
நான் அரசியலுக்கு வருகிறேன் என்று ரஜினி பளிச்சென்று சொல்லவில்லை. ஆனால் அவர் நிச்சயம் அரசியலுக்கு வருகிறார் என அவரின் நெருங்கிய நண்பரான ராஜ் பகதூர் தெரிவித்துள்ளார்.
தனுஷ்
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவரின் மருமகனும், நடிகருமான தனுஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, தலைவர் எந்த முடிவு எடுத்தாலும் சரியாகத் தான் இருக்கும். அரசியல் பேச்சால் குடும்பத்தில் என்த பிரஷரும் இல்லை என்றார்.