Don't Miss!
- News வாக்கு பெட்டியில் தாமரை.. வாக்குச்சாவடி வாசலிலும் "தாமரைப்பூ".. குவிந்த திமுகவினர்.. புதுச்சேரி பரபர
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Lifestyle உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வதந்திகளை நம்பாதீங்க.. "நம்மாளு" கண்டிப்பா வரும்...சிம்பு
சென்னை: இது நம்ம ஆளு திரைப்படம் கண்டிப்பாக வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிம்பு அறிவித்து இருக்கிறார்.
சிம்பு - நயன்தாரா நடிப்பில் உருவான இது நம்ம ஆளு திரைப்படம் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்து வருகிறது, இந்நிலையில் படத்தை முடித்து வெளியிட படத்தின் தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் முடிவெடுத்தார்.
இதற்காக படத்தின் நாயகி நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டு அவர் தர மறுத்ததாக நயன்தாரா மீது டி.ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார்.
டி.ராஜேந்தர் புகார் அளித்த சிறிது நேரத்திலேயே நயன்தாரா மீது எந்தத் தவறும் இல்லை, சிம்புவும் அவரது அப்பா டி.ராஜேந்தரும் சேர்ந்து நயன்தாராவின் கால்ஷீட்டை வீணடித்தனர் என்று படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் பேட்டி தட்டினார்.
இதனால் நேற்று முழுவதும் தமிழ்த் திரையுலகமே பரபரத்துக் கிடந்தது, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நயன்தாராவோ "சட்டப்படி நான்தான் அவர்கள் மீது புகார் கொடுக்க வேண்டும்" என்று ஒரு அறிக்கை விட என்னடா நடக்குது இங்க என்று ரசிகர்கள் ஒன்றும் புரியாமல் குழம்பிக் கிடந்தனர்.
இந்த விவகாரத்தில் உச்சகட்டமாக நேற்று பிரச்சினை பற்றி எரிந்தபோது எதுவும் சொல்லாமல் இருந்த படத்தின் நாயகன் சிம்பு தற்போது இது நம்ம ஆளு திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
Pls do not believe any rumours regarding #INA The film will b released as per plan .V all r one family & team and there is no need to blame
— STR (@iam_str) September 2, 2015
சற்று நேரத்திற்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் 'இது நம்ம ஆளு' குறித்து வெளியாகும் எந்தச் செய்தியையும் நம்ப வேண்டாம். அதெல்லாம் வதந்தி. கண்டிப்பாக திட்டமிட்டபடி படம் வெளியாகும் . நாங்கள் எல்லாம் ஒரே குடும்பம்" எனக் கூறியுள்ளார்.
தற்போது தமிழனின் மனநிலை இதுவாகத்தான் இருக்கும் அவ்வளவும் நடிப்பா?