Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
சிவகார்த்திகேயனுடன் இணைந்து தமிழில் களமிறங்கும் நஸ்ரியாவின் கணவர் பஹத் பாசில்
சென்னை: மோகன் ராஜா-சிவகார்த்திகேயன் படத்தில் மற்றொரு புதுவரவாக மலையாள நடிகர் பஹத் பாசில் இணைந்திருக்கிறார்.
'ரெமோ' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மோகன் ராஜாவின் அடுத்த படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
'தனி ஒருவன்' வெற்றியைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கும் இப்படத்தில் நயன்தாரா, சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கவுள்ளார்.
தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா இப்படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்ததை, அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் மற்றொரு ஆச்சரியமாக மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரும், நஸ்ரியாவின் கணவருமான பஹத் பாசில் இப்படத்தில் இணைந்திருக்கிறார்.
மலையாள சினிமாவில் நல்ல படங்களாக தேடித்தேடி நடித்து வரும் பஹத், இப்படத்தின் மூலம் தன்னுடைய தமிழ் அறிமுகத்தைத் தொடங்குகிறார்.
இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது பலமடங்கு அதிகரித்துள்ளது. தனி ஒருவனைத் தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கும் இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.