Don't Miss!
- Automobiles இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உள்ளே பார் ரஜினி.. 10 நிமிஷம் லேட்டானாலும் லேட்டஸ்டாக போய்ச் சேர்ந்த ஹைதராபாத் விமானம்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி இருந்ததால் சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்ற விமானம் 10 நிமிடம் தாமதமாக கிளம்பிய போதிலும் சரியான நேரத்தில் சென்றடைந்ததாக நடிகை விதியுலேகா ராமன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன் மஞ்சு மனோஜின் திருமணம் இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் மோகன் பாபுவின் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, இசைஞானி இளையராஜா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
Today my flight to Hyd went in extra fast speed despite having 10 mins delay because #Superstar was on board! And next 2 him #Ilayaraja sir
— Vidyu (@VidyuRaman) May 19, 2015
திருமணத்தில் கலந்து கொள்ள ரஜினியும், இளையராஜாவும் நேற்று சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு விமானம் மூலம் சென்றனர். அந்த விமானத்தில் நடிகை விதியுலேகா ராமனும் பயணம் செய்தார். விமானம் சென்னையில் இருந்து 10 நிமிடங்கள் தாமதமாக கிளம்பிச் சென்றது. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் ஹைதராபாத்தை அடைந்தது.
இது குறித்து விதியுலேகா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
10 நிமிடம் தாமதாக கிளம்பியும் நான் சென்ற விமானம் கூடுதல் வேகமாக சென்றதற்கு காரணம் விமானத்தில் சூப்பர் ஸ்டார் இருந்தது தான். அவருக்கு அருகில் இளையாராஜா சார் என்று தெரிவித்துள்ளார்.