Don't Miss!
- Sports இனி வீட்டுல தான் உட்காரணும்.. ஐபிஎல் டீமை நம்பி ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த பிசிசிஐ
- News பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகள் எது? சேலத்தில் இவரா? உத்தேச வேட்பாளர்கள் லிஸ்ட் ?
- Finance H-1B விசா: ஐடி ஊழியர்களுக்கு 3 நாளில் குட் நியூஸ்.. பல பேரின் வாழ்க்கை மாறப்போகுது..!!
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Technology ஆதார் அப்டேட் செய்ய போறீங்களா? தெரியாம கூட இந்த தவறை செய்யாதீர்கள்.. கணக்கு வைக்கும் UIDAI ஆணையம்..
- Automobiles கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
த்ரிஷாவை அடுத்து ட்விட்டரை விட்டு வெளியேறிய விஷால்: காரணம் இதுவா?
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு எதிராக விஷால் பேசியதாக நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வரும் நிலையில் அவர் ட்விட்டரை விட்டு வெளியேறியுள்ளார்.
உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் ஜல்லிக்கட்டை நடத்த முடியவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு தடையை மீறி சில இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு விவகாரத்தால் அலங்காநல்லூர் போர்க்களம் போன்று காட்சியளிக்கிறது.
விஷால்
நடிகர் விஷால் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதாகக் கூறி நெட்டிசன்கள் அவரை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகிறார்கள். இந்நிலையில் விஷால் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டுக்கு எதிராக நான் பேசவே இல்லை. யாரோ என் பெயரைக் கூறி தவறான தகவலை பரப்பியுள்ளனர் என விஷால் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவரை திட்டுபவர்கள் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ட்விட்டர்
விஷாலை பலரும் திட்டித் தீர்த்து வரும் நிலையில் அவர் ட்விட்டரில் இருந்து விலகியுள்ளார். அவர் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாகத் தான் விலகினாரா என தெரியவில்லை.
த்ரிஷா
ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக த்ரிஷாவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ட்விட்டரை விட்டே வெளியேறினார். இந்நிலையில் விஷாலும் ட்விட்டரை விட்டு வெளியேறியுள்ளார்.