Don't Miss!
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
முதுகெலும்பு காணாப் போச்சா, தேடித் தரட்டா: பிரபல நிறுவனத்தை விளாசிய ஹீரோ
மும்பை: தனது அனுமதி இல்லாமல் தனது மற்றும் தன் மகன்களின் புகைப்படத்தை பயன்படுத்திய பிரபல பிராண்டை நடிகர் ரித்திக் ரோஷன் விளாசியுள்ளார்.
பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் எப்பொழுதுமே ஸ்டைலாக உடை அணிவார். அவரை போன்றே அவரது மகன்கள் ரிஹான் மற்றும் ரிதானும் அழகாக, ஸ்டைலாக உடை அணிகிறார்கள்.
இந்நிலையில் ரித்திக் மற்றும் அவரது மகன்களை வைத்து ஹலோ பத்திரிகை போட்டோஷூட் நடத்தியது.
புகைப்படம்
ஹலோ பத்திரிகை நடத்திய போட்டோஷூட்டின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அதில் ரித்திக், ரிஹான் மற்றும் ரிதான் அழகாக இருந்தனர்.
டாமி
பிரபல துணி பிராண்டான டாமி ஹில்ஃபிகர் ரித்திக் மற்றும் அவரது மகன்கள் ஹலோ பத்திரிகைக்கு போஸ் கொடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அவர்கள் தங்கள் பிராண்டு உடை அணிந்திருப்பதாக விளம்பரம் செய்தது.
|
ரித்திக்
டாமியின் பொய் விளம்பரத்தை பார்த்த ரித்திக் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, டியர் டாமி, நான் உங்கள் பிராண்டை அணியவில்லை என் குழந்தைகள் உங்களை விளம்பரம் செய்யவில்லை. உங்கள் முதுகெலும்பு காணாமல் போயிருந்தால் அதை தேடிக் கொடுக்க என்னிடம் சிறந்த அணி உள்ளது என விளாசியுள்ளார்.
|
மன்னிப்பு
ரித்திக் ட்விட்டரில் விளாசியதை பார்த்த டாமி நிறுவனம் ட்வீட்டியிருப்பதாவது, டியர் ரித்திக், விளம்பரப்படுத்த வைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. மன்னித்துக் கொள்ளவும் என தெரிவித்துள்ளது.