Don't Miss!
- News தப்பி தவறி கூட.. இந்த டைம்ல வெளியே போகாதீங்க.. தமிழ்நாட்டிலும் வெப்ப அலை.. முக்கிய அறிவுரை!
- Sports அவர் ஒருவரை தவிர மற்ற ஸ்பின்னர்களுக்கு பயம் .. 120 கிமீ வேகம் அவசியமா.. வருணை பொளந்த ஹர்பஜன் சிங்!
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தடைகள் வந்தாலும் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருப்பேன்: கமல்
சென்னை: எனக்கு இடையூறுகள் அளித்தாலும் என்னால் வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. நான் தொடர்ந்து நடிப்பேன் என்று உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.
தன்னையே சிலர் குறிவைப்பதாக உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். சண்டியர் என கமல் தனது படத்திற்கு தலைப்பை தேர்வு செய்து பிரச்சனையில் சிக்கினார். அதையடுத்து கமல் நடித்த மும்பை எக்ஸ்பிரஸ், விஸ்வரூபம் ஆகிய படங்களும் பிரச்சனையை சந்தித்தன.
அதிலும் விஸ்வரூபம் படத்தை வெளியிட கமல் ஹாஸன் படாதபாடு பட்டார். நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று கூறும் அளவுக்கு அவருக்கு பிரச்சனைகள் ஏற்பட்டது. ஆனால் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அவற்றை நினைத்து முடங்கிவிடாமல் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இது குறித்து கமல் கூறுகையில்,
நாந் நடித்துள்ள பாபநாசம் மற்றும் விஸ்வரூபம் 2 ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனாலும் சரி அல்லது தாமதமானாலும் சரி நான் தொடர்ந்து நடித்துக் கொண்டு தான் இருப்பேன். என்னால் சும்மா உட்கார முடியாது. ரசிகர்களுக்கு நல்ல படங்களை அளிக்க விரும்புகிறேன். அவர்களும் அதைத் தான் என்னிடம் எதிர்பார்க்கிறார்கள். தொழில்நுட்ப வளர்ச்சியை தடுக்கக் கூடாது, அதை தடுக்கவும் முடியாது என்றார்.