Don't Miss!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
நான் ஏன் ரஜினியின் லிங்கா படத்தில் நடிக்க மறுத்தேன் தெரியுமா?: வடிவேலு
சென்னை: விஷால் மீது தனக்கு தனிப்பட்ட முறையில் பாசம் எல்லாம் இல்லை என வைக்கைப்புயல் வடிவேலு தெரிவித்துள்ளார்.
நீண்ட காலம் கழித்து வடிவேலு விஷாலின் கத்திச் சண்டை படத்தில் முழுநேர காமெடியனாக நடித்துள்ளார். படத்தில் வித்தியாசமாக விக் வைத்துக் கொண்டு வரும் வடிவேலுவை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இந்நிலையில் படம் குறித்து வடிவேலு கத்திச் சண்டை படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,
விஷால்
சில பெரிய படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை எல்லாம் ஏற்க மறுத்துவிட்டு விஷாலின் கத்திச் சண்டையில் மட்டும் நடிக்க ஒப்புக் கொண்டது ஏன் என கேட்கிறார்கள். விஷால் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் பாசம் உள்ளதால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை.
நிறைய ஸ்டார்கள்
நிறைய ஸ்டார்கள் உள்ள படங்களில் நடிக்க விரும்பவில்லை. என் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க விரும்புகிறேன். அதனால் தான் ரஜினி சாரின் லிங்கா படத்தில் நடிக்க மறுத்தேன்.
லிங்கா
லிங்கா படத்தில் இரண்டாம் பாதியில் அதுவும் ஒரு சில நிமிடங்களே வரும் கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டார்கள். முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரம் என்பதால் முடியாது என்றேன்.
கத்திச் சண்டை
கத்திச் சண்டை படத்தில் எனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம். அதனால் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். அண்மை காலமாக சோகத்தில் மூழ்கியிருக்கும் தமிழக மக்களுக்கு இந்த படம் மகிழ்ச்சியை அளிக்கும்.