Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகனாக நான் வளர வேண்டும்: சிவகார்த்திகேயன்
சென்னை: பெரிய திரைக்கு நடிக்க வந்து 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சிவகார்த்திகேயன் நடிகராக தான் இன்னும் வளர வேண்டும் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
என்ஜினியரிங் படிப்பை முடித்த சிவகார்த்திகேயன் எம்.பி.ஏ. முடித்துவிட்டு சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சின்னத்திரையில் இருந்த அவர் பாண்டிராஜின் மெரினா படம் மூலம் பெரிய திரைக்கு வந்தார். 2012ம் ஆண்டு பெரிய திரைக்கு வந்த அவர் வந்த வேகத்தில் வளர்ந்தார் என்று தான் கூற வேண்டும்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. இந்நிலையில் அவர் முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள காக்கிச் சட்டை படம் வரும் 27ம் தேதி ரிலீஸாகிறது.
சிவகார்த்திகேயன் பெரிய திரைக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
சினிமாவில் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன். பல சவால்கள் காத்துள்ளன. ஒரு நடிகராக நான் வளர வேண்டும் என்பது எனக்கு தெரியும். உங்களால் தான் நான் இன்று இந்த நிலைக்கு வந்துள்ளேன். அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.