Don't Miss!
- News விஜயகாந்த்தை "வட்டமிட்ட" பாஜக.. அவசர அவசரமா மோடி அப்படி சொன்னாரே, இப்ப என்னாச்சு? குழம்பும் தேமுதிக
- Automobiles இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விவசாயி ஆகிறார் விஷால்... தஞ்சையில் நிலம் வாங்கி நெல் பயிரிடப் போவதாக அறிவிப்பு!
சென்னை: தஞ்சாவூர் டெல்டா பகுதிகளில் நிலம் வாங்கி விவசாயம் செய்யப் போவதாக நடிகர் விஷால் அறிவித்திருக்கிறார்.
நடிகர் சங்கப் பொதுச்செயலாளரான விஷால் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள கிராமம் ஒன்றின், நெல் திருவிழாவில் கலந்து கொண்டார்.
விழாவில் விஷால் பேசும்போது '' எந்த நிலையிலும் விவசாயிகள் தற்கொலை முடிவை தேர்ந்தெடுக்கக் கூடாது. பிரச்சினைகளுக்கு தற்கொலையைத் தேர்ந்தெடுத்தால் தமிழ் சினிமாவில் பாதி பேர் உயிருடன் இருக்க மாட்டார்கள்.
அதனால் தற்கொலை முடிவைக் கைவிட்டு வாழ்ந்து போராடி வெற்றி பெறுங்கள். கஷ்டத்தில் தவிக்கும் விவசாயிகளுக்கு நான் உதவி செய்யக் காத்திருக்கிறேன்.
வெறுமனே பத்திரிக்கைககளில் படித்துக் கொண்டிருந்தால் விவசாயிகளின் கஷ்டங்களை உணர முடியாது. அதனால் தஞ்சாவூர் பகுதிகளில் நிலம் வாங்கி விவசாயம் செய்யப் போகிறேன்.
நேரடியாக விவசாயத்தில் இறங்கினால் தான் விவசாயிகளின் கஷ்டங்களை உணர முடியும்'' என்றார்.
தொடர்ந்து சமூக சேவகியும், நடிகையுமான ரோகினி பேசும்போது '' எந்த ஒரு விவசாயியையும் தோல்வி காண விடமாட்டோம். விவசாயத்தோடு, தைரியத்தையும் சேர்த்து விவசாயிகள் பயிர் செய்ய வேண்டும்'' என்று கூறினார்.