Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அமிதாப் படத்தில் நான் நடிக்கவே மாட்டேனே: தனுஷ்
சென்னை: நடிப்பு என்று வந்துவிட்டால் தான் ஒரு பேராசை பிடித்த சுயநல நடிகன் என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.
ராஞ்ஹனா படம் மூலம் பாலிவுட் சென்ற தனுஷ் தற்போது ஷமிதாப் இந்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். பால்கி இயக்கிய இந்த படத்தின் மூலம் கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா நடிகையாகியுள்ளார். படம் அடுத்த மாதம் ரிலீஸாகிறது.
இந்நிலையில் இது பற்றி தனுஷ் கூறுகையில்,
தமிழ்
கோலிவுட்டில் செய்த தவறுகளை நான் பாலிவுட்டில் செய்ய மாட்டேன். பாலிவுட்டில் ஷமிதாபை விட எனக்கு வேறு எந்த படமும் சிறப்பான இரண்டாவது படமாக அமைய முடியாது.
ஹீரோ
நான் ஹீரோ ஆள் இல்லை. ராஞ்ஹனா படத்திற்கு பிறகு அதே போன்று கதாபாத்திரங்கள் தான் வந்தன. அதில் சில எனக்கு பொருத்தமாக இருந்தன.
பேராசை
நான் பேராசை பிடித்த சுயநல நடிகன். ஷமிதாபில் நடிக்க ஒப்புக் கொண்ட பிறகு நான் என்னை பால்கியிடம் ஒப்படைத்துவிட்டேன்.
அமிதாப்
அமிதாப் பச்சன், பி.சி.ஸ்ரீராம், இளையராஜா ஆகிய ஜாம்பவான்களுடன் பணியாற்றியது கனவாக உள்ளது. அவர்களுடன் சேர்ந்து பணியாற்றுகையில் சற்று பயமாக இருந்தது.
ஷோலே
அமிதாப் பச்சன் நடித்த படங்களின் ரீமேக்கில் நான் நடிக்க மாட்டேன். அவரை போன்று என்னால் நடிக்க முடியாது. அவர் நடித்த படங்களில் ஷோலே மற்றும் தீவார் ஆகியவை எனக்கு மிகவும் பிடிக்கும்.
முக்கியம்
என்னை பொறுத்த வரையில் எனக்கு கோலிவுட்டும் சரி, பாலிவுட்டும் சரி இரண்டுமே முக்கியம் தான் என்றார் தனுஷ்.