Don't Miss!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: 1202 வேட்பாளர்கள்..15.88 கோடி வாக்காளர்கள்;1.67 லட்சம் வாக்குச் சாவடிகள்!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
'பாகுபலி 2' படத்தில் நானா?: சூர்யா விளக்கம்
சென்னை:பாகுபலி இரண்டாம் பாகத்தில் தான் நடிக்கவில்லை என்று சூர்யா தெரிவித்துள்ளார்.
எஸ்.எஸ். ராஜமவுலி பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோரை வைத்து எடுத்த பாகுபலி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. பாகுபலியின் வெற்றியைப் பார்த்து பிரமாண்டத்திற்கு பெயர் போன பாலிவுட்டே மிரண்டுபோய் உள்ளது.
இந்நிலையில் பாகுபலியின் இரண்டாம் பாகத்தையும் எடுத்து வெளியிடுகிறார் ராஜமவுலி. அதற்கான வேலைகளில் அவர் பிசியாக உள்ளார். இந்நிலையில் பாகுபலி இரண்டாம் பாகத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின.
பாகுபலியின் சிங்கமா, அடடே சூப்பராக இருக்குமே என அவரது ரசிகர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இது குறித்து சூர்யாவிடமே கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு அவர் கூறுகையில்,
பாகுபலி 2 படத்தில் நான் நடிக்கவில்லை. இது குறித்து என்னுடன் யாரும் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.