twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் தியாகியல்ல... தமிழ் துரோகியுமல்ல - விஜய் பேச்சு

    By Shankar
    |

    நான் தியாகியான்னு தெரியாது... ஆனா துரோகியில்லை என்று கத்தி பட விழாவில் பேசினார் நடிகர் விஜய்.

    கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா பெரும் எதிர்ப்பு மற்றும் கடும் கெடுபிடிகளுக்கிடையில் நேற்று சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே ஏதோ ஒரு அவஸ்தையில் இருப்பவர்களைப் போலவே காட்சி அளிக்க, விஜய் மட்டும் வெற்றிப் புன்னகையுடன் காட்சி தந்தார்.

    வதந்திக்கு விளக்கம்

    வதந்திக்கு விளக்கம்

    விழாவில் அவர் பேசுகையில், "உண்மைக்கு விளக்கம் கொடுத்தா அது இன்னும் தெளிவாக விளங்கும். ஆனால் வதந்திக்கு விளக்கம் கொடுத்தா அது உண்மையாகிடும்.

    சண்டை போடறதுக்கில்ல

    சண்டை போடறதுக்கில்ல

    படம் எடுக்கிறதுங்கிறது சண்டை போடறதுக்குல்ல.. சண்டை சச்சரவுகளை மறந்து பார்த்து ரசிக்கிறதுக்குதான்.

    துரோகியில்ல

    துரோகியில்ல

    நான் தியாகியா என்னன்னு தெரியாது. ஆனா தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் நான் துரோகி இல்லை. எந்த ஒரு மக்களுக்கும் ஆதரவாகவோ, இல்ல எதிராகவோ இந்தப் படத்தை எடுக்கல.. அது மட்டும் நிச்சயம்.

    பழகிவிடும்

    பழகிவிடும்

    ஒரு படத்தில் ஒரு வசனம் உண்டு, ஆரம்பத்தில் ஒரு மாதிரியாக இருக்கும் பிறகு போக போக அதுவே பழகிவிடும்," என்றார்.

    மறைமுகமாக

    மறைமுகமாக

    இந்த விழாவில் கத்தி படத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்து நேரடியாக எதையும் பேசவில்லை விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    In Kaththi audio launch function, Vijay says that he never betrays Tamil
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X