Don't Miss!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Sports உனக்காக நான் இருக்கேன் நண்பா! 34 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார்..ஹர்திக்கிற்கு கொடுத்த ரியாக்சன்
- Automobiles இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கஸ்தூரிராஜா வாங்கிய கடனுக்கு நான் எந்த உத்தரவாதமும் தரவில்லை - ரஜினிகாந்த்
பைனான்சியர் போத்ராவிடம் தனுஷின் அப்பா இயக்குநர் கஸ்தூரிராஜா வாங்கிய கடனுக்கு தான் எந்த உத்தரவாதமும் தரவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வட சென்னையைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் போத்ராவிடம் கஸ்தூரிராஜா ரூ 65 லட்சம் கடன் வாங்கியிருந்தார். இந்தத் தொகையை அவர் திருப்பிச் செலுத்தாததால், அவர் மீது மோசடி வழக்குத் தொடர்ந்தார் போத்ரா. அதில், தான் வாங்கிய கடனுக்கு ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்துள்ளதாக தன்னிடம் கூறித்தான் கஸ்தூரிராஜா கடன் வாங்கினார் என்றும், இப்போது கடனை திருப்பித் தராததால், ரஜினியை இதில் தலையிடக் கோர வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கில் ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது நீதிமன்றம்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் மனு தாக்கல் செய்துள்ள ரஜினிகாந்த், கஸ்தூரி ராஜா வாங்கிய கடனுக்கு தான் உத்தரவாதம் வழங்கவில்லை என்றும், தமது பெயருக்கு களங்கம் விளைவிக்க பைனான்சியர் போத்ரா முயற்சிப்பதாக புகார் தெரிவித்துள்ளார். மேலும் பைனான்சியர் போத்ரா மனுவை தள்ளுபடி செய்யவும் ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.