Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டனாக மாபெரும் சாதனை.. தோனியின் ரெக்கார்டை உடைத்து எறிந்த ருதுராஜ்
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அப்படி இருந்த விஜய்யா இப்படி ஆகிவிட்டார்: வியப்பில் புலி படக்குழு
சென்னை: புலி படப்பிடிப்பில் விஜய்யை பார்ப்பவர்கள் அட நம்ம விஜய்யா இது என்று வியக்கும் அளவுக்கு நடந்து கொள்கிறாராம்.
சிம்புதேவன் இயக்கி வரும் ஃபேன்டஸி படமான புலியில் விஜய் நடித்து வருகிறார். படத்தில் ஹன்சிகா, ஸ்ருதி ஹாஸன், ஸ்ரீதேவி, சுதீப் என்று நட்சத்திர பட்டாளமே உள்ளது. புலி படத்தின் இசை உரிமையை ஏற்கனவே சோனி நிறுவனம் வாங்கிவிட்டது.
இப்படி புலி படம் பற்றி அவ்வப்போது ஏதாவது செய்தி வந்து கொண்டிருக்கிறது.
விஜய்
விஜய் படங்களில் காமெடி செய்து கலகலப்பாக நடித்தாலும் படப்பிடிப்பு தளத்தில் அமைதியாக இருப்பார் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆச்சரியம்
படப்பிடிப்பு தளத்தில் விஜய் இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு யாருடனும் பேசாமல் அமைதியாக இருப்பார். ஆனால் கேமராவுக்கு முன்பு வந்துவிட்டால் ஆளே மாறிவிடுவார் என்று நடிகைகள் அவரைப் பற்றி தெரிவித்துள்ளனர்.
விஜய்யா?
வழக்கமாக படப்பிடிப்பு தளத்தில் அமைதியாக இருக்கும் விஜய் புலி படப்பிடிப்பு தளத்தில் மற்றும் அனைவரிடமும் ஜாலியாக சிரித்துப் பேசுகிறாராம். இதை பார்க்கும் படக்குழுவினராலேயே இது விஜய் தானா என்று நம்ப முடியவில்லையாம்.
பேக்கப்
படப்பிடிப்பில் விஜய்யின் காட்சிகளை படமாக்கி முடித்து அவர் கிளம்பலாம் என்று கூறினாலும் மனிதர் அங்கேயே இருந்து அரட்டை அடிக்கிறாராம்.
கதை
புலி படத்தின் கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாம். அந்த மகிழ்ச்சியில் தான் மனிதர் கலகலப்பாகிவிட்டார் என்று கூறப்படுகிறது.