Don't Miss!
- News நாயுடுவுடன் கைகோர்த்த காபு..தனித்து நிற்கும் ரெட்டி! ஆந்திராவை ஆள போவது யார்? சாதிதான் அங்கு எல்லாமே
- Technology ATM.. டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது விதி.. இனி சிக்கலே இருக்காது..
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சகிப்பின்மை பற்றி நான் கூறியதை திரித்துவிட்டார்கள், நான் ஏன் மன்னிப்பு கேட்கணும்?: ஷாருக்கான்
மும்பை: சகிப்பின்மை பற்றி நான் தெரிவித்த கருத்தை திரித்துவிட்டார்கள். மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நான் எதையும் கூறவில்லை என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சகிப்புத்தன்மை இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இது கவலை அளிக்கும் விஷயம் என பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கடந்த மாதம் தெரிவித்தார். இதையடுத்து பாஜகவினர் அவரை பாகிஸ்தான் ஏஜெண்ட் என்று விமர்சித்ததுடன், அவரை பாகிஸ்தானுக்கு செல்லுமாறும் கூறினர்.
இந்நிலையில் இது குறித்து ஷாருக்கான் தற்போது கூறியிருப்பதாவது,
திரித்து
நான் கருத்து தெரிவிக்கும் பலவற்றை திரித்து கூறிவிடுகிறார்கள். நான் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு எதையும் கூறவில்லை. விளக்கம் கொடுக்கும் நிலையில் நான் இல்லை.
மக்கள்
இந்த நாட்டு மக்களுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும். அவர்களுக்கு நான் கூறியது புரியவில்லை என்று நினைக்கிறேன். 25 ஆண்டுகளாக மக்கள் என் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளனர். அவர்களின் அன்பால் தான் நான் இன்று இந்த நிலையில் உள்ளேன்.
படம்
தியேட்டர்களில் என் படம் நிறுத்தப்பட்டுள்ளது என்று வாட்ஸ்ஆப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் எனக்கு மெசேஜ் வந்ததை பார்த்து மிகவும் வருத்தப்பட்டேன். மகிழ்ச்சியை அளிக்கும் படத்தை ஏன் நிறுத்த வேண்டும்?
அன்பு
கடந்த 20 ஆண்டுகளில் அனைத்து மாநில, மத மக்கள் என் பணியை மதிப்பிட்டுள்ளனர். சில நேரம் வெற்றி பெற்றுள்ளேன், சில நேரம் தோல்வி அடைந்துள்ளேன். அனைத்து மத மக்களும் என் மீது அன்பு வைத்துள்ளனர்.
நிர்பயா
நிர்பயா வழக்கு குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. தில்வாலே படம் குறித்து செய்தியாளர்கள் மேலும் தகவல் கிடைக்குமா என்று எதிர்பார்க்கையில் நான் நிர்பயா வழக்கு பற்றி பேச மாட்டேன்.