Don't Miss!
- News ரூ.1823 கோடி வரி பாக்கி என IT நோட்டீஸ்! டென்ஷன் ஆன காங்கிரஸ்.. நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
கமலின் குறுஞ்செய்தியால் மகிழ்ந்து போன மலையாள இயக்குநர்
சென்னை: உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வரும் ரம்ஜான் தினத்தன்று திரைக்கு வர இருக்கும் படம் பாபநாசம். மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக் தான் பாபநாசம்.
மலையாளத்தில் திரிஷ்யம் படத்தை இயக்கிய இயக்குநர் ஜீது ஜோசப்பே தமிழில் பாபநாசம் படத்தை இயக்கி இருக்கிறார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து தற்போது படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் இயக்குநர் ஜீது ஜோசப் அலைபேசியில் ஒரு குறுந்தகவல் மின்ன எடுத்துப் பார்த்த ஜீது மகிழ்ச்சியில் மிதந்து இருக்கிறார்.
காரணம் அந்தச் செய்தியை அனுப்பியது உலகநாயகன் கமல். படப்பிடிப்பிற்கு முன்பு நிறைய பேர் கமல் படமா அவர் நிறைய விஷயங்களில் தலையிடுவார் என்று ஜோசப்பை பயமுறுத்தி விட்டனராம். இதனால் படம் முடிவடையும் வரை ஒருவித படபடப்புடனே இருந்த ஜீது உங்களுடன் பணியாற்றியது ஐ.வி.சசியுடன் பணியாற்றியது போலவே இருந்தது என்ற கமலின் குறுஞ்செய்தியைப் பார்த்து மகிழ்ச்சியில் அழுதே விட்டாராம்.
மேலும் படப்பிடிப்பின் போது ஒரு சில ஆலோசனைகள் சொன்னது தவிர வேறு எதிலும் கமல் தலையிடவில்லை என்று உலகநாயகனின் பெருந்தன்மையை பற்றிப் புகழ்ந்து கூறியுள்ளார்.