Don't Miss!
- News ரூ.1823 கோடி வரி பாக்கி என IT நோட்டீஸ்! டென்ஷன் ஆன காங்கிரஸ்.. நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
அன்பை வலியுறுத்தும் தலைவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது!- கமல் ஹாஸன்
சென்னை: இன்று அன்பை வலியுறுத்தும் தலைவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது, என்றார் நடிகர் கமல்ஹாஸன்.
சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லுாரியும், இந்தோ - அமெரிக்கன் அசோசியேஷனும் இணைந்து, மார்டின் லுாதர் கிங் நினைவு சொற்பொழிவு நிகழ்வை நடத்தின.
இதில் பங்கேற்ற கமல் ஹாஸன் பேசுகையில், "வேட்டை சமூக மரபிலிருந்து விலகி, நாகரிகம் வளர்ந்து, மனிதர்கள் நிலைத்து வாழத் துவங்கினர்.
அதன் பின்பும், மனிதர்களை வேட்டையாடுவதை, போர் விளையாட்டாக பல நாடுகள் செய்தன. போர் வெறி மிகுந்து, உலகை வெல்லும் வழியாக, ஆயுதமாக மாறியது போர்.
போர்க்குற்றங்களை பல நாடுகள், குற்றங்களாகவே பார்ப்பதில்லை. உண்மையில், உலகை, போரால் வெல்ல முடியாது; அன்பால்தான் வெல்ல முடியும். அதற்கு, உலக மக்கள் யாவரும் ஒரே குடும்பம் என்பதை உணர வேண்டும். அதைத்தான், காந்தி, மார்டின் லுாதர் கிங், நெல்சன் மண்டேலா உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.
அப்படிப்பட்ட தலைவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. நம் குழந்தைகளிடம், போரில்லாத உலகம் பற்றிய கனவை வளர்க்க வேண்டும். அதற்கு, அந்தத் தலைவர்களின், அறவழியை போதிக்க வேண்டும். அப்போது தான், பல தலைவர்கள் உருவாவர். உலகில் அமைதி ஏற்படும்," என்றார்.