Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அண்ணன் சந்திரஹாஸனை பற்றி பேச வேண்டியதே இல்லை, ஏன்னா..: கமல் உருக்கம்
சென்னை: சந்திரஹாஸனை பற்றி பேச வேண்டியதே இல்லை. அவர் என்னுடைய நிழலாக இருந்து கொண்டே இருப்பார் என உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.
உலக நாயகன் கமல் ஹாஸனின் சகோதரர் சந்திரஹாஸன் அண்மையில் காலமானார். இந்நிலையில் சென்னை காமராஜர் அரங்கில் அஞ்சலி கூட்டம் இன்று நடந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்ட கமல் பேசியதாவது,
சந்திர ஹாஸன்
சந்திர ஹாஸன் மாதிரி இருக்கக் கூடியவர்கள் தான் அறிவுரையை கூட கருத்துக்களை போன்று கூறுவார்கள். மத்தவங்க எல்லாம் கருத்தையே அறிவுரை மாதிரி சொல்வாங்க.
அண்ணன்
அண்ணன் என்பது ரத்தத்தினால் கிடைத்த உறவு. அவருடன் ஏற்பட்ட தொடர்பு ஒரு தனிப்பட்ட பாக்கியமாக நான் கருதுகிறேன். எனக்கு அந்த மாதிரி ரொம்ப அதிர்ஷ்டங்கள் உண்டு.
குடும்பம்
நான் என்னைப் பத்தி நினைக்கும்போது எனக்கு மட்டும் இப்படி நடக்குதேன்னு கவலைப்பட்டதே கிடையாது. அதற்கு காரணம் எனக்கு இந்த மாதிரி ஒரு குடும்பம், சண்முகம் அண்ணாச்சி, பாலசந்தர் சார் போன்ற குருமார்கள், இப்படிப்பட்ட சகோதரர்கள் உள்ளது. இவர்கள் எல்லாம் இருக்கும்போது, நாங்கள் இருக்கிறோம் என்று இங்கு சொல்லப்பட்டபோது அதை நான் ரொம்ப சீரியஸா எடுத்துக்கிறேன். நீங்கள் எல்லாம் என் கூட இருக்கணும்.
அன்பு
இதே அன்பை என்னால் திருப்பித் தர முடியும் என்பதை கற்றுக் கொடுத்தவர் சந்திரஹாஸன். நான் நிறைய பேசலாம். ஆனால் என் வாழ்க்கையில் என்னை பாதித்தவர்கள் பற்ற தினமும் ஒரு முறையாவது பேசுவேன்.
பாலசந்தர்
ரவிக்குமாருக்கு தெரியும், அவருடன் படப்பிடிப்பில் இருக்கும் நாட்களில் பாலசந்தர் அவர்களை பற்றி தினமும் ஒரு முறையாவது அவரிடம் பேசிவிடுவேன். நாகேஷை பற்றி பேசுவேன். சந்திரஹாஸனை பற்றி பேச வேண்டியதே இல்லை. அவர் என்னுடைய நிழலாக இருந்து கொண்டே இருப்பார்.
இயற்கை
இயற்கை அவரை எடுத்துக் கொண்டது. ஆனால் அவர் என்னுள் ஒரு பாகமாக கலந்துவிட்டார். இருந்தவரை அனுபவித்ததையும், பெற்றதையும், கற்றதையும் நான் இருக்கும்வரை அனுபவிக்கத்தான் போகிறேன். அந்த சந்தோஷத்துடன் நான் தொடர்ந்து வாழ்கிறேன்.
கஷ்டம்
அவரிடம் கற்றுக் கொண்ட விஷயங்கள் ஏராளம். அவரிடமிருந்து கற்றுக் கொள்ளாத விஷயங்களை எல்லாம் இனிமேல் கற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அண்ணன் இல்லாத வாழ்க்கை கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும். ஆனால், அதற்கான பயிற்சியை கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார் என்றார் கமல்.
-
புஷ்பா 2 ஓடிடி உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?.. பல டாப் நடிகர்கள் லைஃப் டைம் வசூலே இவ்ளோ இல்லையே!
-
மங்காத்தா என்ன பெரிய மங்காத்தா.. கோட் அதை விட பெரிய சம்பவம் செய்யப் போகுது.. அஜ்மல் ஓபன் டாக்!
-
98 கோடி சிக்கிடுச்சு.. ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!