Don't Miss!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: கர்நாடகா, கேரளா உட்பட் 13 மாநிலங்கள்- 88 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை...! - கமல் ஹாஸன்
தமிழக அரசியல் நிலவரம் குறித்து தொடர்ந்து ட்விட்டரில் எழுதி வரும் கமல் ஹாஸன், இன்றும் ஒரு கமெண்டைப் பதிவு செய்துள்ளார்.
விஸ்வரூபம் ரிலீசுக்குப் பிறகு அதிமுக ஆட்சியை நேரடியாகவும், மறைமுகமாகவும் அவ்வப்போது விமர்சித்து வருகிறார் கமல் ஹாஸன். தமிழ் சினிமா நடிகர்களில் ஓரளவு துணிச்சலாக இந்த வேலையைச் செய்தவர், செய்து கொண்டிருப்பவர் இப்போதைக்கு கமல் ஹாஸன்தான். அவரது கருத்துகள் பல சமயங்களில் புரிவதில்லை என்று குற்றம்சாட்டப்பட்டாலும், ஆட்சிக்கு எதிரான குரல் அது என்பது மட்டும் எல்லோருக்கும் புரிகிறது.
சசிகலா முதல்வராக முயன்றபோது, நேரடியாக, ஓ பன்னீர் செல்வமே முதல்வராகத் தொடரட்டும் என்று கூறினார் கமல்.
இன்று எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கு கோரும் நிலையில், கமல் போட்டுள்ள ட்வீட் இது:
"இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை. வெல்வது நல்ல மக்களின் மந்திரமா அந்தச் சொக்கனின் தந்திரமா பார்ப்போம்."
இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை. வெல்வது நல்ல மக்களின் மந்திரமா அந்தச் சொக்கனின் தந்திரமா பார்ப்போம்.
— Kamal Haasan (@ikamalhaasan) February 17, 2017
கமலின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்து இயக்குநர் சீனு ராமசாமி, "இரவில் ரசியமாக நரிகள் பரியானது சொக்கப்பன் நாட்டில்....பொதுவில் பகலில் உருமாறுமா.. நரிகளுக்கும் வெடகமுண்டு மனசாட்சியுண்டு," என்று கூறியுள்ளார்.
@ikamalhaasan இரவில் ரசியமாக நரிகள் பரியானது சொக்கப்பன் நாட்டில்....பொதுவில் பகலில் உருமாறுமா.. நரிகளுக்கும் வெடகமுண்டு மனசாட்சியுண்டு
— Seenu Ramasamy (@seenuramasamy) February 17, 2017