Don't Miss!
- News வெப்ப அலைக்கு பேரு என்ன தெரியுமா? தமிழ்நாட்டுக்கு மஞ்சள் அலர்ட்! மேற்கு வங்கத்திற்கு ரெட் அலர்ட்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
மொபைல் போன் வைத்திருந்தால் எதைவேண்டுமானாலும் எடுப்பதா? நியூசென்ஸ்...! - கமல் காட்டம்
ஒரு மொபைல் போன் கையில் இருந்துவிட்டால் எதையும் படமெடுக்கும் உரிமை தனக்கு இருப்பதாக நினைப்பது தவறு என்று கண்டித்துள்ளார் கமல் ஹாஸன்.
பாபநாசம் படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது, "பாபநாசம் திரைப்படம் அனுமதி இல்லாமல் மொபைலில் படம் எடுப்பதைப் பற்றி பேசுகிறது. இதைப்பற்றி தங்கள் கருத்து என்ன?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கமல், "ஒரு மொபைல் போன் கையில் இருந்துவிட்டால், எதையும் படம் எடுக்கக் கூடிய உரிமை தனக்கு இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். அருகில் வந்து நின்று ஃபோட்டோ எடுத்துவிட்டுத்தான், ஃபோட்டோ எடுத்துக்கலாமா என்றே கேட்கிறார்கள். அதுவும் ஒரு நடிகனாக இதை நான் அதிகமாக அனுபவிக்கிறேன். இது மிகவும் தவறானது. என் அனுமதியின்றி எனது அந்தரங்கத்தில் நுழைவதற்கு அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது?
இவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. மொபைல் கம்பெனிக்காரன் விளம்பரத்திலேயே மிகப்பெரிய நியூசென்ஸ் செய்கிறான். ஒருவன் ஒருத்தியை ஃபோட்டோ எடுக்கிறான். அவள் உடனேயே அவனிடம் மயங்கி காதலில் விழுகிறாள். இதை என்ன சொல்வது," என்றார்.