Don't Miss!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Automobiles காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- News நாங்க அப்பவே சொன்னோமே.. இவிஎம் பட்டனை தொட்டாலே பாஜகவுக்கு விழும் 2 ஓட்டு! காங்கிரஸ் புது டிமாண்ட்
- Finance Infosys: லாபத்தில் 30% உயர்வு, முதலீட்டாளர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் ரூ.28 ஈவுத்தொகை..!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நமக்குள் ஒற்றுமை வேண்டும்.... நல்ல முடிவுகளை விரைவில் எடுங்கள் - கமல்
நல்ல முடிவுகளை விரைவில் எடுங்கள். நம்முடன் வர மறுப்பார்களுக்கும் அழைப்பு விடுங்கள் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது பொதுக்குழு நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. இப்பொதுக்குழு கூட்டத்தில் ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
கமல் நேரில் வராவிட்டாலும் பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்களிடையே ஸ்கைப் தொழில்நுட்பம் மூலமாக திரையில் தோன்றி நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
அப்போது அவர், நமது இடத்தில் பொதுக்குழு நடத்த வேண்டும் என்று ஆசைபட்டேன். அதை நடத்த வைத்தவர்களுக்கு நன்றி. நமக்குள் ஒற்றுமை வேண்டும். என்னை விட வயதில் இளையவர்களுக்கு நல்ல நட்பும், நேசமும் இருக்கிறது. அதற்காக தான் இளைஞர்கள் எல்லாம் ஒன்றுக் கூடி இப்பொதுக்குழுவை நடத்தி வருகிறார்கள். நாங்கள் எல்லாம் ஒதுங்கியிருந்து ரசித்து வருகிறோம்.
#UlagaNayagan #Chevalier @ikamalhaasan talks to Members through #Skype at #NadigarSangam #AGM @NadigarsangamP pic.twitter.com/6qWl8dF09J
— FridayCinemaa (@FridayCinemaa) November 27, 2016
நல்ல முடிவுகளை விரைவில் எடுங்கள். நம்முடன் வர மறுப்பார்களுக்கும் அழைப்பு விடுங்கள். பெரிய மனிதர்களாவது அப்படித்தான் என நான் நினைக்கிறேன் என்று கமல் தெரிவித்தார்.