Don't Miss!
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Sports உனக்காக நான் இருக்கேன் நண்பா! 34 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார்..ஹர்திக்கிற்கு கொடுத்த ரியாக்சன்
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கொம்பனின் என் பாத்திரம் பருத்திவீரனுக்கு நேர் எதிராக இருக்கும்! - கார்த்தி
பருத்திவீரனில் நான் நடித்த பாத்திரத்துக்கு நேர் எதிராக கொம்பன் பாத்திரம் இருக்கும். மாமனார் மருமகன் பாசத்தை புதிய கோணத்தில் காட்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார் நடிகர் கார்த்தி.
‘குட்டிப்புலி' படத்துக்குப் பிறகு முத்தையா இயக்கியிருக்கும் இரண்டாவது படம் கொம்பன்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது. பின்னர், படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
கார்த்தி
படம் குறித்து நடிகர் கார்த்தி கூறுகையில், "பருத்தி வீரனுக்குப் பிறகு கிராமத்துக் கதைகளைத் தேர்வு செய்வதில் எனக்கு தயக்கம் இருந்தது. காரணம், அந்த சாயலிலேயே நடிப்பதாக குற்றச்சாட்டு வர வாய்ப்பிருக்கிறது.
ஆனால் குட்டிப்புலி முத்தையா இந்தக் கதையைச் சொன்னபோது ரொம்பப் பிடிச்சிருந்தது.
குடிகாரனில்லை
கொம்பனில் நான் குடிகாரனில்லை, பருத்திவீரனுக்கு நேர் எதிரானவன். இந்தப் படத்தில் எனக்கு மாமனாராக நடித்துள்ள ராஜ்கிரணும், அம்மாவாக நடித்துள்ள கோவை சரளாவும் படத்துக்கு மிக அழுத்தமான உணர்வைக் கொடுத்துள்ளனர்," என்றார்.
ராஜ்கிரண்
படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ராஜ்கிரண் கூறுகையில், "இந்தப் படம் பார்த்த பிறகு யாராவது ஒரு மாமனார் - மருமகன் ஈகோ மோதலத் தவிர்த்தாலே போதும்.. அதுதான் இந்தப் படத்தின் வெற்றி," என்றார்.
லட்சுமி மேனன் வரவில்லை
இந்த நிகழ்ச்சியில் படத்தின் நாயகி லட்சுமி மேனன் வரவில்லை. ப்ளஸ் டூ தேர்வு எழுதிக் கொண்டிருப்பதால் அவரால் வரமுடியவில்லையாம்.