Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
எனக்கு பட்டம் வேண்டாம்... சிவகார்த்திக்கேயன்
வளர்ந்து வரும் இளம் நடிகர் சிவகார்த்திக்கேயன் அறிமுக நாயகிகளுடன் மட்டுமே ஜோடியாக நடித்து வந்தார். முதன் முறையாக மான் கராத்தே படத்தில் அவருக்கு பிரபல நாயகி ஹன்சிகா ஜோடி சேர்ந்துள்ளார்.
இது நிறைய இளம் நடிகர்களுக்கு காதில் புகையை வரவழைத்திருக்கிறாதாம். பலரும் பொறாமையால் பொசுங்கினாலும் சிலர் வாய்விட்டே கேட்டு விட்டார்களாம்.
தன்னுடைய இந்த வெற்றிக்குக் காரணம் மக்கள்தான் என்று கூறும் சிவகார்த்திக்கேயன், அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருப்பதாக சொல்கிறார்.
சம்பளத்தை ஏற்றினேனா?
ஒருகோடி, இரண்டு கோடி இப்போது 5 கோடியாக உயர்ந்து விட்டது சிவகார்த்திக்கேயன் சம்பளம் என்கின்றன ஊடகச் செய்திகள். தான் ஒருபோதும் சம்பளத்தை ஏற்றவில்லை என்கிறார் அவர்.தயாரிப்பாளர்கள் முடிவு செய்து தருவதை தான் வாங்கிக் கொள்வதாக கூறுகிறார்.
சண்டைக்காட்சி வேணாம்
சிவகார்த்திக் கேயன் ஒரே மாதிரி நடிப்பதாக புகார் உள்ளது. இனி வரும் படங்களில் மாற்றம் இருக்கும். பறந்து பறந்து சண்டை போடும் காட்சிகள் தனக்கு வேண்டாம் என்கிறார்.
பட்டம் வேண்டாமே
தன் பெயருக்கு முன்னால் பட்டம் போட்டுக் கொள்ளும் ஆசை எதுவும் இல்லையாம். வளர்ந்து வரும் நடிகரான தன்னை பட்டம் கொடுத்து பேக் பண்ணி அனுப்பிவிட வேண்டாம் என்கிறார்.
பொறாமையா?
மான் கராத்தே படத்தில் ஹன்சிகா ஜோடியாக நடிப்பது பற்றி பலரும் அவரிடமே பலரும் கேட்டு விட்டார்களாம். 7 நாள் மட்டுமே இதுவரை சேர்ந்து நடித்திருப்பதாக கூறியுள்ளார் சிவகார்த்திக்கேயன்.