Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
#ஜல்லிக்கட்டு பற்றி நான் சொன்ன நல்லதை மட்டும் யாருமே கண்டுக்கல: ஆர்யா
சென்னை: ஜல்லிக்கட்டு குறித்து நான் பேசிய நல்லதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.
ஆர்யாவும், அவரது தம்பி சத்யாவும் அமீரின் இயக்கத்தில் சந்தனத் தேவன் என்ற படத்தில் நடிக்கிறார்கள். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது.
சந்தனத் தேவன் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஆர்யா கூறுகையில்,
அந்த சர்ச்சைக்கு முன்பும், பின்பும் ஜல்லிக்கட்டு பற்றி நான் கூறிய நல்ல விஷயங்களை யாருமே கண்டுகொள்ளவில்லை. நான் ஜோக்காக அப்படி கேட்டேன், மக்கள் அதை செய்தியாக்க முடிவு செய்துவிட்டார்கள்.
ஜல்லிக்கட்டுக்கு தற்போது உள்ள மவுசால் நாங்கள் சந்தனத் தேவன் படத்தை எடுக்கவில்லை. அமீர் சார் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு என்றார்.
ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்று ஆர்யா ட்விட்டரில் கேட்டு பலரிடம் திட்டு வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.