Don't Miss!
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- News "டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி?" கவர்னர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! ஆம் ஆத்மி பதிலடி.. சட்டம் சொல்வது என்ன
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
தினமும் 2000 ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து புகைப்படம் எடுக்க நினைத்தேன்! - ரஜினிகாந்த்
ரஜினியின் லேட்டஸ்ட் 'வாய்ஸ்'.... முழுமையாக!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏப்ரல் 12 முதல் 16 ஆம் தேதி வரை தன் ரசிகர்களை சந்திக்க இருந்த நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரஜினிகாந்த வாட்ஸ் அப்பில் அனுப்பிய குரல் பதிவு முழுமையாக...
"என்னை வாழவைத்த தெய்வங்களான என் ரசிக பெருமக்களுக்கு நான், ரஜினிகாந்த், என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் ஒரு தகவல், பத்து ஆண்டுகள் ஆயிற்று நான் உங்களை சந்தித்து, உரையாடி, புகைப்படம் எடுத்து. ரசிகர்களாகிய நீங்களும் என்னை சந்திப்பதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தீர்கள். நேரமின்மையின் காரணமாக அது சாத்தியமில்லாமல் போனது.
தற்போது அதற்கான சந்தர்ப்பமும்,வாய்ப்பும் கிடைத்த நிலையில் ரசிகர்களாகிய உங்களை நான் சந்திப்பதற்கு ஏப்ரல் 12 முதல் 16 ஆம் தேதி வரை சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில், உங்களை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது.
ஒரு நாளைக்கு 4 அல்லது 5 மாவட்டங்களில், மாவட்டத்திற்கு 300 என்ற வீதம் தோராயமாக 2000 பேருடன் புகைப்படம் எடுத்து அவர்களுக்கு விருந்து கொடுக்க, என்னுடைய ஆசை மற்றும் விருப்பத்தின் பெயரில் திட்டமிடப்பட்டிருந்தது.
அத்தனை நபர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுப்பது என்பது ஒரு நாளில் நடைமுறையில் கடினமான விடயம் என்பதால், 8 பேர் கொண்ட குழுவாக புகைப்படம் எடுக்க முடிவு செய்யப்பட்டது.
ரசிகர்களுக்கு இது ஏமாற்றம் அளிக்ககூடியதாக இருந்ததால், ரசிகர்கள் அனைவரும் தனித்தனியாக என்னுடன் புகைப்படம் எடுக்க கோரிக்கை வைத்தீர்கள்.
ரசிகர்களாகிய உங்களின் விருப்பத்தை ஏற்று, தற்போது நடைபெற இருந்த (ஏப்ரல் 12- 16 தேதி) சந்திப்பை ஒத்தி வைத்துள்ளோம். இனி வரும் காலத்தில், ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு மாவட்ட ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுக்க தக்க முன்னேற்பாடு செய்யப்படும். இதற்கான தேதி முடிவு செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கிறோம்.
என் ரசிகர்களாகிய நீங்கள் இதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்."